Rama Online Tamil: April 2018

Monday, April 30, 2018

தேனுடன் வெந்நீர் கலந்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

தேனுடன் வெந்நீர் கலந்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

பொதுவாகவே தேன் நமது உடலுக்கு ரொம்பவே நல்லதுனு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்,மேலும் பல பிரச்சனைகளுக்கு இது ஒரு மருந்தாகவும் மற்றும் தீர்வாகவும் இருக்கும் ஒன்று.இந்த தேனில் அதிகளவு மருத்துவகுணம் நிறைந்துள்ளது.தினமும் காலையில் தேனை வெந்நீருடன் கலந்து குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் அதை பார்ப்போம்.



தேனுடன் வெந்நீர் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

* காலையில் வெறும் வயிற்றில் தேனை வெந்நீருடன் கலந்து குடிப்பதால் தொண்டையில் ஏற்படும் வரட்டு இருமல் ,தொண்டையில் உள்ள புண்,சளி,இருமல் போன்றவற்றில் இருந்து முழுமையாக குணம் பெறலாம்.

* செரிமான மண்டலத்தில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேற்றி செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.

* இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால் இரத்தம் சுத்தமாக சுத்தமாக வைத்து கொள்ள உதவுகிறது.


* தேனுடன் வெந்நீர் கலப்பதால் கணிமசத்துகள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவு உள்ளது.

* இதனை தினமும் குடித்துவருவதால் தேவையற்ற பாக்டீரியவை தடுத்து ,நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது.


* மேலும் தேவையற்ற அலர்ஜியை தடுக்க உதவியாக இருக்கிறது.

* உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைத்து இரத்த அழுத்தம் வருவதை குறைக்க வழி வகை செய்கிறது.

Saturday, April 28, 2018

பாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்-அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை !!!

பாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்-அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை !!!


வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்துல பாட்டில் தண்ணீரின் தேவை ரொம்பவும் அதிகமாயிடுச்சி,எல்லோரும் அதிகளவு பாட்டில் தண்ணீர்தான் பயன்படுத்துகிறோம்.சர்வதேச அளவில் பாட்டில் வாட்டர் சந்தையானது ஒரு வருடத்துக்கு 15௦ பில்லியன் டாலர் பிடிச்சிருக்கு இதுல இந்தியாவும் அடங்கும்.

ஆனால் இதில் அதிர்ச்சி தரும் தகவல்னு பார்த்தா 9௦ சதவீதம் பிரான்ட் பாட்டிலில்(மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது) அது மனித உடலை பெருமளவு பாதிக்கும் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.



சராசரியாக ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றில் 1௦.4 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.தினமும்  2-3 லிட்டர் குடிப்பது நமது உடலுக்கு நல்லதுன்னு தெரியும்,ஆனா இது மாதிரி பாட்டில் தண்ணீர் குடிப்பது காசு கொடுத்து நமக்கு நாமலே கெட்டதை நமது உடலில் சேர்த்துகொள்கிறோம்.

நீங்கள் முடிந்தவரை மண்பானை மற்றும் வெண்கல பாட்டிலில் தண்ணீர் குடிப்பது மிக மிக நல்லது.முடிந்தவரை பாட்டில் தண்ணீர் தவிர்ப்பது நல்லது,பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தால் நாம் மற்றும் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம்.

"பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தாதீர்"

Friday, April 27, 2018

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் தெரியுமா ?

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் தெரியுமா ?



நெல்லிக்காய் அனைவருக்கும் பிடித்த ஒன்று இதில் சின்ன நெல்லி,பெரிய நெல்லி என இரு வகைகள் உண்டு.சிலர் சின்ன நெல்லியை சமைபதற்கு கூட பயன்படுத்துவார்கள்,நெல்லிக்காயின் மருத்துவகுணம்னு சொல்லப்போன ரொம்பவும் அதிகம்,தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மரணதைகூட தள்ளிபோடலாம்னு நாம் முன்னோர்கள் சொல்வார்கள்.


நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்:

  • நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் போல வேறு எந்த பழத்திலும் இல்லைன்னு சொல்வார்கள்,இது காயகல்பம் தயாரிக்க நெல்லிக்காய் உதவியாக இருக்கிறது,தாது விருத்தி மற்றும் தலைமுடி டானிக்காக பயன்படுத்தலாம்.
  • நெல்லிக்காயில் வைட்டமின் C அதிக அளவு இருப்பதால் கண்களை அதன் இமைபோல நெல்லிக்காய் பாதுகாக்கிறது.
  • நெல்லிக்காய் சாறு தயாரித்து குடிப்பதன் மூலம் இரத்தசோகை,குடல்புண்,சக்கரைநோய் போன்றவற்றிற்கு சிறந்தது,கொட்டை நீக்கிய நெல்லிகையை அரைத்து தண்ணீர்விட்டு கொஞ்சம் தேன் மற்றும் இளநீர் சேர்த்து பருகுவது மிகவும் நல்லது.
  • நரைமுடி நீங்க நெல்லிசாறு மற்றும் அதற்கு சம அளவு பாதம் எண்ணெய் மற்றும் அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இரவில் கூந்தலில் தேய்த்து காலையில் கழுவிவிட கூந்தல் கருப்பாக மாறும்.
  • பச்சை நெல்லிக்காய்,துளசி,கொட்டை நீக்கிய முத்தன கடுக்காய்,கருவேப்பிலை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து அரைத்து அதனை விழுதாக எடுத்துகொள்ளவேண்டும் பின்பு அதனுடன் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவிவர முடி உதிர்வதை தடுக்கலாம்.
"நாம் அன்றாட உணவில் நெல்லிக்காய் சேர்த்து கொள்வதால் ஆரோக்கியமாக வாழலாம்."

Thursday, April 26, 2018

தொப்பையை எளிதில் குறைக்க வேண்டுமா?

தொப்பையை எளிதில் குறைக்க வேண்டுமா?

வயிற்றை சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க உதவும் சில எளிய வழி வீட்டு வைத்தியம் பற்றி பார்ப்போம்.

தொப்பை உருவாக முதல் காரணம் உணவுமுறையின் மாற்றங்கள்தான் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவு முறையை மாற்றி தற்போது சாப்பிடும் உணவுமுறைதான் முதல் காரணம்.அதுமட்டுமல்லாமல் வேலை அதிகம் செய்யாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்திருப்பதும் ஒரு முக்கிய காரணம்னு சொல்லலாம்.

1. எலுமிச்சை சாற்றை விட இரண்டு மடங்கு அதிக சக்தி பூண்டில் இருக்கு ,எனவே தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்புகள் கரைவதோடு,உடலில் இரத்த ஓட்டமும்சீராக இருக்க உதவுகிறது.





2. பானை போன்ற வயற்றை குறைக்க இன்னொரு சிறந்த வழி உடற்பயிற்சி,ஆகவே தினமும் காலையில் குறைந்தது 3௦ நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் மற்றும் தொடையில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை கரைதிடலாம்.


3. அதுமட்டுமல்லாமல் எடை குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவ பொருள் தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சைசாறு,1 டீஸ்பூன் தேன் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


4.உடல் எடை குறைக்க டயட்டில் இருக்கும்போது பச்சை காய்கறிகள்,கேரட் மற்றும் தக்காளி போன்ற குறைவான கலோரிகளை கொண்ட உணவை மட்டும் எடுத்துகொள்வது நல்லது.அதிக வைட்டமின் மற்றும் கணிமசத்துகள் நிறைந்த உணவை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் உடல் எடை விரைவில் குறையவும்,அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.



5.இஞ்சி,மிளகு,இலவங்கப்பட்டை போன்றவை உடல் எடை குறைக்க மிகவும் சிறந்தது.இஞ்சி டீ தினமும் இரண்டு முறை குடித்துவர அதுமட்டுமல்லாமல் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சாதாரண நீரில் குடித்துவந்தால் உடல் எடை குறைய இது உதவியாக இருக்கும்.மேலும் சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் சூடான நீரை குடித்துவந்தால் இயற்கையாகவே உடல் எடை குறையும்.


6.தொடர்ந்து இரண்டு மாதம் காலையில் எழுந்தவுடன் 1௦ கறிவேப்பிலை சாப்பிட்டுவந்தால் இது தொப்பையை குறைக்க உதவும்.நாம் சாப்பிடும் உணவு நமக்கு போதுமான அளவு சாப்பிட்டால் நல்லது அளவுக்கு மீறிய உணவு ஆபத்தை உண்டாக்கும்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு "


Wednesday, April 25, 2018

வாழைத்தண்டு ஜூஸ் வாரம் 2 முறை மட்டும் குடியுங்கள்!!!

வாழைத்தண்டு ஜூஸ் வாரம் 2 முறை மட்டும் குடியுங்கள்!!!


மருத்துவகுணம் நிறைந்த வாழைத்தண்டு ஜுஸை வாரம் 2 முறை குடித்துவந்தால் நிறைய நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும்.அதை பற்றி காண்போம்.


வாழைத்தண்டு ஜூஸ் நன்மைகள்:

* வாழைத்தண்டை இடித்து சாறு எடுத்து ,அதனுடன் முள்ளங்கி சாறு சேர்த்து காலை,மாலை ஆகிய இரு வேளையும் 1௦௦ மில்லி அளவு குடித்து வந்தால் கல்லடைப்பு இருந்தால் குணமடையும்.

* தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்துவந்தால்,நீர்கட்டி பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

* ஒரு நாள் வாழைத்தண்டு சாறு ,ஒரு நாள் பார்லி கஞ்சி குடித்துவந்தால் சிறுநீரகக் கற்கள் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

*வாழைதண்டுடன்  இஞ்சி ,எலுமிச்சை சாறு,வெங்காயம்,மிளகு,சீரகம்,சேர்த்து வாழைத்தண்டு சூப் செய்து வாரத்திற்கு மூன்று முறை 2௦௦ மில்லி அளவுகுடித்துவர கொழுப்பை குறைத்து நீரழிவு நோய் வராமல் தடுக்கும்.

* பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் தள்ளிபோதல் அதிகபடியான ரத்தபோக்கு போன்ற மாதவிடாய் கோளாறுகளை தடுக்க வாழைத்தண்டு மற்றும் வாழைபூ சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

* வறட்டு இருமல் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் தினமும் இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை குடித்துவந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

*வாழைத்தண்டை காயவைத்து பொடியாக்கி அதனுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள்காமாலை  இருந்து விரைவில் குணமடையும்.
 
(முக்கிய குறிப்பு )

வாழைத்தண்டு சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால் வயதானவர்கள் குறைவாக சேர்த்துகொள்வது நல்லது மேலும் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் வாழைத்தண்டு சேர்த்து கொள்ளவேண்டாம் . 

Tuesday, April 24, 2018

3 நாட்களில் தொப்பையை குறைக்க !

3 நாட்களில் தொப்பையை குறைக்க?

தொப்பையை எளிதில் குறைக்க முடியுமானு கேட்ட முடியும் சில வழிகளை நாம் தினந்தோறும் கடைபிடிப்பதன் மூலம் தொப்பையை மிக சுலபமாக குறைக்கலாம்.


பெரும்பாலும் தொப்பை வருவது நமது உணவு பழக்கவழக்கங்கள் என்று சொல்லலாம் மேலும் நாம் அதிகபடியான வேலை செய்யாமல் ஒரே இடத்தில உட்காந்திருப்பது இதற்கு மிக பெரிய காரணம்.தற்போது நகரங்களில் அதிகபடியான வேலை என்றால் கணினி முன் அமர்ந்துகொண்டு வேலை செய்வதுதான் இதுவே அவர்களுக்கு தொப்பை வருவதற்கு காரணம்.

இதை தடுக்க இந்த ஜூஸ் தினமும் குடித்துவந்தால் முற்றிலும் தவிர்க்கலாம்.

ஜூஸ் செய்யும் முறை:

எலுமிச்சை பழம் - 5
புதினா  - 15
வெள்ளரிக்காய் - 1
துருவிய இஞ்சி - 2 ஸ்பூன்
தண்ணீர்   - 2.5 லிட்டர்

வெள்ளரிக்காய் மற்றும் இரண்டு எலுமிச்சை பழத்தை எப்போதும் போல் வட்டமாக நறுக்கி கொள்ளவும்,மீதமுள்ள 3 எலுமிச்சை பழத்தை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விடவும் அதனுடன் நறுக்கிய புதினா மற்றும் 1.5 லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும் பின்பு அதனுடன் இஞ்சி கொஞ்சம் தண்ணீர் கலந்து கொள்ளவும் பின்பு அதனுடன் வெட்டி வைத்த வெள்ளரிக்காய்,எலுமிச்சை பழத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட  வேண்டும்.இந்த ஜூசை ஒருநாள் முழுவதும் ஊறவைத்து இதனை தினமும் செய்து  உடற்பயிற்சியோடு சேர்த்து மூன்று நாட்கள் குடித்து வரும்போது உங்களுக்கு மாற்றம் தெரியும்.

இந்த ஜூஸ் குடிப்பதால் குடிக்கும் நன்மைகள்:

1.எலுமிச்சை பழம்.



எலுமிச்சை பழத்தில் பெட்ரிக் எனும் நார்சத்து அதிகம் இருப்பதால் இது பசி எடுப்பதை கட்டுபடுதுவதுடன் உடலில் சேரும் நச்சுகளை மட்டுமின்றி தேவையில்லாத கொழுப்புகளையும் கரைத்து வெளியோ தள்ளுகிறது.

2.வெள்ளரிக்காய்.


வெள்ளரிகாயில் நீர்சத்து,நார்சத்து அதிகம் இருக்கிறது இதில் கலோரிகள் குறைவு என்பதால் இது உடலில் அல்களில் அளவை சீராகி  வயற்றில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

3.புதினா.

புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிப்பதோடு நமக்கு புத்துணர்ச்சியை கொடுகிறது,மற்றும் பசியை கட்டுபடுத்தி வாய் துர்நாற்றத்தை தடுகிறது.

4.இஞ்சி.

இஞ்சி கலோரிகளை எதிர்த்து அதிகபடியான கொழுப்புகளை உடலில் சேர்வதை தடுகிறது.இது ஜீரணமாவதற்கு ரொம்பவும் உதவியாக இருக்கிறது.

Monday, April 23, 2018

கோடையை சமாளிக்க இயற்கை தந்த அற்புதம் "நுங்கு"

கோடையை சமாளிக்க இயற்கை தந்த அற்புதம் "நுங்கு"


கோடையை சமாளிக்க இயற்கை தந்த மருத்துவ குணம் நிறைந்த "நுங்கு"இதன் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.இன்றைய நவீன காலகட்டத்தில் நிறைய பேருக்கு நுங்கு பற்றிய விழிப்புனர்வு இல்லை,ஆனால் நன்றாக தெரிந்தவர்கள் இந்த நுங்கை கண்டால் விடமாட்டார்கள்.

இது கிராமப்புறங்களில் அதிகம் கிடைக்கும் ஆனால் நகர்புறங்களில் இந்த நுங்கை பார்ப்பது மிகவும் அரிது,அப்படிப்பட்ட இந்த நுங்கு அதிகம் கோடை காலத்தில் அதிகமாக காணலாம்,நுங்கை பற்றி தெரிந்தவர்கள் நகர்ப்புறங்களில் கிடைக்கும்போது வாய்ப்பை பயன்படுதிகொள்வர்கள்.

உண்மையாக சொல்லப்போனால் நுங்கு பாரம்பரியமான,சத்தான இயற்கை உணவாகும்.கோடை வெட்பத்தை சமாளிக்க நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப பொருட்களை இயற்கை விளைவிக்கிறது அப்படி ஒன்றுதான் நுங்கு இது நமக்கு பலவித நன்மைகளை தருகிறது.

பனை மரத்தில் இரண்டு வகைஉண்டு ஆண்,பெண் என நுங்கு நமக்கு கிடைப்பது பெண் மரத்திலிருந்து தான் கிடைகிறது.

நுன்குவை தோல் எடுத்துவிட்டு சாப்பிடுவதைவிட தோலோடு சாப்பிட்டால்  நமக்கு இதில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்,வைட்டமின்  சி ஆகியவை நிறைதுள்ளது.

அம்மைநோய் தாக்கியவர்கள் நுங்கு சாபிட்டால் உடல் குளிர்ச்சிபெரும்,இது போன்ற பனை மரங்கள் வடமாநிலங்களில் கிடையாது,தென்மாநிலங்களுக்கு கிடைத்த பெரிய சிறப்புனே சொல்லலாம்,இப்படிப்பட்ட நுங்கு கிடைத்தால் விட்டுடாதிங்க கண்டிப்பா வாங்கி சாப்பிடுங்கள் அப்படி நீங்கள் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கும் நல்லது பனை மரத்தை காக்கவும் உதவியாக இருக்கும்.

Saturday, April 21, 2018

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்போம் பொதுவாக கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் எதாவது ஒரு வகையில் தேங்காய் சம்பந்தமான பொருட்கள் பயன்படுத்துவோம்.

ஏதோ ஒரு ரூபத்தில் தேங்காய் இல்லாமல் எந்த ஒரு வீட்டையும் பார்க்க முடியாது,பெண்கள் சமையலறை ஆகட்டும் அல்லது அலங்கார பொருட்கள் ஆகட்டும் அல்லது மருந்துபெட்டி ஆகட்டும் இவை அனைத்திலும் எதாவது ஒரு ரூபத்தில் தேங்காய் இருந்துகொண்டு தான் இருக்கும்.

பெண்கள் சமையலறையில் அரைத்த தேங்காய் அல்லது தேங்காய் பால் பயன்படுத்துவார்கள் அனைவரும் தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவோம் இத்தனை வழிகளில் நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறோம்,அப்படி இத்தனை வழிகளிலும் நாம் பயன்படுத்த காரணம் இதன் மருத்துவ குணங்கள் தான் காரணம்,நாம் எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அதற்கேற்ப பயன்கள் கண்டிப்பாக இருக்கும்.


தேங்காய் எண்ணெய் நாம் ஏன் தலைக்கு பயன்படுத்துகிறோம்னு தெரியுமா,இந்த தேங்காய் எண்ணெய் அருமையான நறுமணதை  தருவதோடு,அதையும் மீறி தலைமுடியை மெருதுவாக வைத்து கொள்ள உதவுகிறது.தேங்காய் எண்ணையில் அதிகபடியான ஈரப்பதம் இருப்பதே முக்கிய காரணம்,முடி நன்றாக வளரவும் ,முடி ஈரப்பததுடன் இருக்கவும் தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் போலவே தேங்காயில்  இருந்து எடுக்கப்படும் தேங்காய் பாலும் பல மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறது.

  • உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால் நீரழிவு நோய் வரும் ,ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது.
  • உடலில் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் C,சருமம் மற்றும் இரத்த குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் மற்றும் மீள் திறனுடன் வைத்திருக்கும்,இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.
  • தேங்காய் பாலில் தேவையான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, குறிப்பாக உடம்பில் உள்ள எலும்புகளை உறுதியக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டசத்தாக இருக்கிறது.
  • போதுமான இரும்பு சத்துக்கள் உடம்பில் இல்லையென்றால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும்,இதனால் இரத்த அணுக்கள் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் இரத்த சோகையை உண்டாக்கும்.ஒரு கப்  தேங்காய் பாலில் உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புசத்து 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் தசைகளையும் நரம்புகளையும் ரிலாக்ஸ்ஆக செய்யவும்  உடல் எடையை கட்டுபடுத்தவும் இரத்த கொதிப்பை கட்டுபடுத்தவும் புரோஸ்டேட் சுரபியின் ஆரோக்கியத்தையும்  மேம்படுத்தவும் தேங்காய்பால் பெரிதும் உதவியாக இருக்கிறது.

"தமிழர்களின் உணவு என்றுமே உயர்ந்த ஒன்று உணவே மருந்து மருந்தே உணவு"


Friday, April 20, 2018

பேரீச்சப்பழத்தின் மருத்துவ குணங்கள்

பேரீச்சப்பழத்தின் மருத்துவ குணங்கள்


பேரீச்சப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்

பேரீச்சப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம்னா அது பேரீச்சப்பழம் தான்,இந்த பேரீச்சப்பழம் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் அரபுநாடுகளில் அதிகம் விளையக்கூடியது,ஆயுர்வேத யுனானி சித்த மருத்துவத்தில் பேரீச்சப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்படிப்பட்ட பேரீச்சப்பழம் இரும்புசத்து,கால்சியம்,வைட்டமின் 'எ',பி,பி2,பி5 மற்றும் வைட்டமின்"இ" சத்துக்கள் அடங்கியுள்ளன.



இதன் மருத்துவ குணங்கள்:

  • தினமும் 2 பேரீச்சப்பழம் அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து குடித்து வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

  • ஒரு டம்ளர் தண்ணீரில் பேரீச்சப்பழதை அரைத்து கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுபெருவதுடன் ,உடல் வலிமையும் கூடும்.

  • விபத்தில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சப்பழம் சாப்பிட்டு வந்தால் இழந்த இரத்தத்தை ஈடுகட்டலாம்.

  • வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சப்பழ சாறு அதிகம் குடித்து வந்தால் இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

  • தினமும் இரவில் 3 பேரீச்சப்பழம் சாப்பிட்டு பிறகு சுடுதண்ணீர் அருந்தினால் மலசிக்கல் நீங்கி மலம் சுலபமாக வெளியேறும்.

  • பேரீச்சப்பழதை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட்டு வந்தால்  வாதம்,பித்தம்,மூட்டுவீக்கம் குணமடையும்.

  • சக்கரைநோய் உள்ளவர்கள் பேரீச்சப்பழதை தாராளமாகசாப்பிடலாம்,பேரீச்சப்பழதில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

  • பல் முளைக்கும் குழந்தைகள் வயிறுகடுப்பால் கஷ்டப்படும்போது பேரீச்சப்பழதை சுடுநீரில் கலந்து குழைய வேகவைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை குடித்தால் பேதி நிற்கும்.

Tuesday, April 17, 2018

கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்

கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்



பழங்களில் விலை குறைவானதும் எளிதில் கிடைக்ககூடிய பழம் என்று சொன்னால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கொய்யபழம் தான் ,அதிலும் விலை குறைவு என்பதால் அனைவராலும் வாங்கி உண்ணக்கூடிய கொய்யபழதில் முக்கிய உயிர் சத்துக்களும் ,தாதுஉப்புகளும் அடங்கியுள்ளது அதாவது வைட்டமின் B மற்றும்   C ஆகிய உயிர் சத்துக்கள் மற்றும் கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு போன்ற தாதுஉப்புகளும்  அதில் அதிகமாக காணப்டுகின்றது.

கொய்யாபழத்தில் ஊட்டசத்துக்கள் அதிகம் வைட்டமின் B உள்ளது,இது ஆரஞ்சி பழத்தில் இருக்கும் வைட்டமின் C போல இதில் நான்கு மடங்கு அதிகம் உள்ளது.


இதை கடித்து சாப்பிடுவதால்  பற்களும்,ஈறுகளும் பலம் பெறுவதோடு கொய்யாபழத்தால் குடல் ,வயிறு,ஜீரனப்பை,மண்ணீரல்,கல்லீரல் போன்றவை வலிமை பெறுகின்றன.இது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்,இரவு உணவுக்கு பின் நன்கு பழுத்த கொய்யாபழங்களை  சாப்பிட்டால் மலசிக்கல் வருவதை தடுக்கும்.

(1) பல் முளைக்கும் வயசுல இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கொய்யாபழத்தை கொடுத்து வந்தால் அவர்களின் பற்கள் மற்றும் ஈறுகள் உறுதியாக இருக்கும்.

(2) கொய்யா மரத்தின் வேர்,இலைகள் மற்றும் பட்டைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் காயங்கள் விரைவில் குணமாகும்.

(3) கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கு உகந்தது,கொய்யாவிற்கு  சக்கரையை குறைக்கும் தன்மையுண்டு.

(4) கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருவதாக உள்ளது.

(5) சொறி சிரங்கு ,ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .

(6) விஷ கிருமிகளை கொள்ளும் சக்தி கொய்யாபழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டுபண்ணும் விஷ கிருமிகள் ரத்தத்தில் கலப்பதை தடுத்து அதை கொன்றுவிடும்.

Thursday, April 12, 2018

கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்

கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்


பொதுவாகவே கருவேப்பிலை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் ஆனாலும் தெரிந்தவை சில தெரியாதவை பல இருக்கு அதை பற்றி பார்ப்போம்.

கருவேப்பிலை அதிகமாகவே சிலர் சமையல்ல சேர்த்துப்கொள்வார்கள்,சமையலுக்கு சுவையும்,மனமும் இது கொடுக்கும் நிறையப்பேர் சாப்பிடும்போது சாப்பாட்டில் வரும் கருவேப்பிலையை கீழே எடுத்து போடுவது உண்டு ஏன்னா சில பேருக்கு அதை சாப்பிட பிடிக்காது.இப்படி பிடிக்காமல் தூக்கி போடும் சிலவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது நமக்கு தெரியாது.அப்படி நிறைய சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த ஒன்றுதான் "கருவேப்பிலை".


கருவேப்பிலையில் 6௦ சதவீதம் நீர் சத்தும்,6.9 சதவீதம் புரதசத்தும்,5 சதவீதம் தாதுஉப்புகளும்,6.3 சதவீதம் நார்சத்தும் அடங்கியுள்ளன.இதுல இருக்குற கோயினிகள் என்ற வேதிபொருள் தான் மனம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கு அதுமட்டுமல்லாமல் தயாமின்,நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமின்(VITAMINS) கருவேப்பிலையில் உள்ளது.

இதனுடைய இலைகள்,வேர்,வேர்ப்பட்டை என அதன் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணங்கள் உள்ளவைதான்.

(1)   சிறிதளவு கருவேப்பிலையுடன் கஸ்துரி மஞ்சள்,கசகசா பட்டை அனைத்தும் சேர்த்து அரைத்து அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளில்  தேய்த்து வந்தால் தழும்புகள் மறையும்.

(2)  கருவேப்பிலை இலையில் சிறிது தண்ணீர் சேர்த்து வெண்சங்கை கொண்டு அரைத்து முகபருவில் தடவி வந்தால் பருக்கள் மறையும்,அதுமட்டுமல்லாமல் தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நோய் குணமாகும்.

(3) தேங்காய் எண்ணையில் கருவேப்பிலை இலைகளை போட்டு கற்பூரதுண்டு சிறிது சேர்த்து பாட்டிலில் ஊறவைத்து பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருப்பாக இருப்பதுடன்,உடலில் உள்ளபித்தம் மற்றும் கிறுகிறுப்பு போன்ற நோய்கள் மறையும்.

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...