Rama Online Tamil: தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

Saturday, April 21, 2018

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்போம் பொதுவாக கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் எதாவது ஒரு வகையில் தேங்காய் சம்பந்தமான பொருட்கள் பயன்படுத்துவோம்.

ஏதோ ஒரு ரூபத்தில் தேங்காய் இல்லாமல் எந்த ஒரு வீட்டையும் பார்க்க முடியாது,பெண்கள் சமையலறை ஆகட்டும் அல்லது அலங்கார பொருட்கள் ஆகட்டும் அல்லது மருந்துபெட்டி ஆகட்டும் இவை அனைத்திலும் எதாவது ஒரு ரூபத்தில் தேங்காய் இருந்துகொண்டு தான் இருக்கும்.

பெண்கள் சமையலறையில் அரைத்த தேங்காய் அல்லது தேங்காய் பால் பயன்படுத்துவார்கள் அனைவரும் தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவோம் இத்தனை வழிகளில் நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறோம்,அப்படி இத்தனை வழிகளிலும் நாம் பயன்படுத்த காரணம் இதன் மருத்துவ குணங்கள் தான் காரணம்,நாம் எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அதற்கேற்ப பயன்கள் கண்டிப்பாக இருக்கும்.


தேங்காய் எண்ணெய் நாம் ஏன் தலைக்கு பயன்படுத்துகிறோம்னு தெரியுமா,இந்த தேங்காய் எண்ணெய் அருமையான நறுமணதை  தருவதோடு,அதையும் மீறி தலைமுடியை மெருதுவாக வைத்து கொள்ள உதவுகிறது.தேங்காய் எண்ணையில் அதிகபடியான ஈரப்பதம் இருப்பதே முக்கிய காரணம்,முடி நன்றாக வளரவும் ,முடி ஈரப்பததுடன் இருக்கவும் தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் போலவே தேங்காயில்  இருந்து எடுக்கப்படும் தேங்காய் பாலும் பல மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறது.

  • உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால் நீரழிவு நோய் வரும் ,ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது.
  • உடலில் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் C,சருமம் மற்றும் இரத்த குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் மற்றும் மீள் திறனுடன் வைத்திருக்கும்,இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.
  • தேங்காய் பாலில் தேவையான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, குறிப்பாக உடம்பில் உள்ள எலும்புகளை உறுதியக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டசத்தாக இருக்கிறது.
  • போதுமான இரும்பு சத்துக்கள் உடம்பில் இல்லையென்றால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும்,இதனால் இரத்த அணுக்கள் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் இரத்த சோகையை உண்டாக்கும்.ஒரு கப்  தேங்காய் பாலில் உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புசத்து 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் தசைகளையும் நரம்புகளையும் ரிலாக்ஸ்ஆக செய்யவும்  உடல் எடையை கட்டுபடுத்தவும் இரத்த கொதிப்பை கட்டுபடுத்தவும் புரோஸ்டேட் சுரபியின் ஆரோக்கியத்தையும்  மேம்படுத்தவும் தேங்காய்பால் பெரிதும் உதவியாக இருக்கிறது.

"தமிழர்களின் உணவு என்றுமே உயர்ந்த ஒன்று உணவே மருந்து மருந்தே உணவு"


No comments:

Post a Comment

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...