கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்
பொதுவாகவே கருவேப்பிலை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் ஆனாலும் தெரிந்தவை சில தெரியாதவை பல இருக்கு அதை பற்றி பார்ப்போம்.
கருவேப்பிலை அதிகமாகவே சிலர் சமையல்ல சேர்த்துப்கொள்வார்கள்,சமையலுக்கு சுவையும்,மனமும் இது கொடுக்கும் நிறையப்பேர் சாப்பிடும்போது சாப்பாட்டில் வரும் கருவேப்பிலையை கீழே எடுத்து போடுவது உண்டு ஏன்னா சில பேருக்கு அதை சாப்பிட பிடிக்காது.இப்படி பிடிக்காமல் தூக்கி போடும் சிலவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது நமக்கு தெரியாது.அப்படி நிறைய சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த ஒன்றுதான் "கருவேப்பிலை".
கருவேப்பிலையில் 6௦ சதவீதம் நீர் சத்தும்,6.9 சதவீதம் புரதசத்தும்,5 சதவீதம் தாதுஉப்புகளும்,6.3 சதவீதம் நார்சத்தும் அடங்கியுள்ளன.இதுல இருக்குற கோயினிகள் என்ற வேதிபொருள் தான் மனம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கு அதுமட்டுமல்லாமல் தயாமின்,நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமின்(VITAMINS) கருவேப்பிலையில் உள்ளது.
இதனுடைய இலைகள்,வேர்,வேர்ப்பட்டை என அதன் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணங்கள் உள்ளவைதான்.
(1) சிறிதளவு கருவேப்பிலையுடன் கஸ்துரி மஞ்சள்,கசகசா பட்டை அனைத்தும் சேர்த்து அரைத்து அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளில் தேய்த்து வந்தால் தழும்புகள் மறையும்.
(2) கருவேப்பிலை இலையில் சிறிது தண்ணீர் சேர்த்து வெண்சங்கை கொண்டு அரைத்து முகபருவில் தடவி வந்தால் பருக்கள் மறையும்,அதுமட்டுமல்லாமல் தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நோய் குணமாகும்.
(3) தேங்காய் எண்ணையில் கருவேப்பிலை இலைகளை போட்டு கற்பூரதுண்டு சிறிது சேர்த்து பாட்டிலில் ஊறவைத்து பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருப்பாக இருப்பதுடன்,உடலில் உள்ளபித்தம் மற்றும் கிறுகிறுப்பு போன்ற நோய்கள் மறையும்.
Nice info keep
ReplyDelete