வாழைத்தண்டு ஜூஸ் வாரம் 2 முறை மட்டும் குடியுங்கள்!!!
மருத்துவகுணம் நிறைந்த வாழைத்தண்டு ஜுஸை வாரம் 2 முறை குடித்துவந்தால் நிறைய நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும்.அதை பற்றி காண்போம்.
வாழைத்தண்டு ஜூஸ் நன்மைகள்:
* வாழைத்தண்டை இடித்து சாறு எடுத்து ,அதனுடன் முள்ளங்கி சாறு சேர்த்து காலை,மாலை ஆகிய இரு வேளையும் 1௦௦ மில்லி அளவு குடித்து வந்தால் கல்லடைப்பு இருந்தால் குணமடையும்.
* தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்துவந்தால்,நீர்கட்டி பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.
* ஒரு நாள் வாழைத்தண்டு சாறு ,ஒரு நாள் பார்லி கஞ்சி குடித்துவந்தால் சிறுநீரகக் கற்கள் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.
*வாழைதண்டுடன் இஞ்சி ,எலுமிச்சை சாறு,வெங்காயம்,மிளகு,சீரகம்,சேர்த்து வாழைத்தண்டு சூப் செய்து வாரத்திற்கு மூன்று முறை 2௦௦ மில்லி அளவுகுடித்துவர கொழுப்பை குறைத்து நீரழிவு நோய் வராமல் தடுக்கும்.
* பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் தள்ளிபோதல் அதிகபடியான ரத்தபோக்கு போன்ற மாதவிடாய் கோளாறுகளை தடுக்க வாழைத்தண்டு மற்றும் வாழைபூ சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
* வறட்டு இருமல் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் தினமும் இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை குடித்துவந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
*வாழைத்தண்டை காயவைத்து பொடியாக்கி அதனுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள்காமாலை இருந்து விரைவில் குணமடையும்.
(முக்கிய குறிப்பு )
வாழைத்தண்டு சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால் வயதானவர்கள் குறைவாக சேர்த்துகொள்வது நல்லது மேலும் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் வாழைத்தண்டு சேர்த்து கொள்ளவேண்டாம் .
No comments:
Post a Comment