பேரீச்சப்பழத்தின் மருத்துவ குணங்கள்
பேரீச்சப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்
பேரீச்சப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம்னா அது பேரீச்சப்பழம் தான்,இந்த பேரீச்சப்பழம் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் அரபுநாடுகளில் அதிகம் விளையக்கூடியது,ஆயுர்வேத யுனானி சித்த மருத்துவத்தில் பேரீச்சப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்படிப்பட்ட பேரீச்சப்பழம் இரும்புசத்து,கால்சியம்,வைட்டமின் 'எ',பி,பி2,பி5 மற்றும் வைட்டமின்"இ" சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதன் மருத்துவ குணங்கள்:
- தினமும் 2 பேரீச்சப்பழம் அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து குடித்து வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் பேரீச்சப்பழதை அரைத்து கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுபெருவதுடன் ,உடல் வலிமையும் கூடும்.
- விபத்தில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சப்பழம் சாப்பிட்டு வந்தால் இழந்த இரத்தத்தை ஈடுகட்டலாம்.
- வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சப்பழ சாறு அதிகம் குடித்து வந்தால் இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
- தினமும் இரவில் 3 பேரீச்சப்பழம் சாப்பிட்டு பிறகு சுடுதண்ணீர் அருந்தினால் மலசிக்கல் நீங்கி மலம் சுலபமாக வெளியேறும்.
- பேரீச்சப்பழதை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட்டு வந்தால் வாதம்,பித்தம்,மூட்டுவீக்கம் குணமடையும்.
- சக்கரைநோய் உள்ளவர்கள் பேரீச்சப்பழதை தாராளமாகசாப்பிடலாம்,பேரீச்சப்பழதில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
- பல் முளைக்கும் குழந்தைகள் வயிறுகடுப்பால் கஷ்டப்படும்போது பேரீச்சப்பழதை சுடுநீரில் கலந்து குழைய வேகவைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை குடித்தால் பேதி நிற்கும்.
No comments:
Post a Comment