நல்லெண்ணெய் மகத்துவத்தை நாம் மறந்தது ஏன்?
பொதுவாகவே நல்லெண்ணெய் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது தீபாவளி தான் ஏன்னா அன்றையதினம் மட்டும் தான் நாம் நல்லெண்ணெய் பயன்படுத்துவோம் தலைக்கு தேய்த்து குளிக்க,பின்பு அந்த எண்ணெய் பயன்படுத்துவது இல்லை.
நம் முன்னோர் சொல்லியவை:
நமது முன்னோர்கள் நல்லெண்ணெய் எதற்கெல்லாம் பயன்படுத்தினார்கள் தெரியுமா தலைக்கு தேய்த்து குளிப்பார்கள் வாரத்திற்கு இரண்டு முறை,தலைக்கு மட்டும் அல்லாமல் காதுகளில் கொஞ்சம்,கண்களில் கொஞ்சம்,ஏன் தொப்புளில் கூட குளிக்கும்போது ஊற்றி நல்லா தேய்த்து குளிப்பார்கள் நமது உடலில் எங்கெல்லாம் சூடு அதிகமாக இருக்குமோஅங்கெல்லாம் பயன்படுத்துவார்கள்.அதுமட்டும் அல்லாமல் 199௦ முன்பு சமையலுக்கு கூட இந்த நல்லெண்ணெய் பயன்பாடு அதிகமாக இருந்தது.நமது முன்னோர்களும் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் ஆனால் இப்போது இந்த எண்ணையில் நிறைய கலப்படம் அதுமட்டும் அல்லாமல் நாம் நல்லெண்ணெய் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நல்ல எண்ணைக்கு பதிலாக கெட்ட எண்ணெய் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.
நல்லெண்ணெய் தரும் நன்மைகள்:
1.நல்லெண்ணெய் வாரம் இருமுறை தேய்த்து குளித்தல் உடல் குளிர்சிபெரும்,உடலும் ஆரோக்கியமாக இருக்க நல்லெண்ணெய் பயன்படுகிறது.
2.எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் பயபடுதுவதால் புத்திக்கு தெளிவு உண்டாகும்,கண்களுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாகும்,மனதிற்கு நல்ல மகிழ்ச்சி உண்டாகும்,மற்றும் நல்ல தேகபூஸ்தி உண்டாகும்.
3.கண்கள் சம்பந்தப்பட்ட நோய்,செவி நோய் போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டவை இந்த நல்லெண்ணெய்.
4.ஆண்களை பொறுத்தவை சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.பெண்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
5.தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி வாய் கொப்பளித்தால் பற்கள் பலம் பெரும் மற்றும் வாய்துர்நாற்றத்தை தடுக்கலாம்.
No comments:
Post a Comment