கோடையை சமாளிக்க இயற்கை தந்த அற்புதம் "நுங்கு"
கோடையை சமாளிக்க இயற்கை தந்த மருத்துவ குணம் நிறைந்த "நுங்கு"இதன் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.இன்றைய நவீன காலகட்டத்தில் நிறைய பேருக்கு நுங்கு பற்றிய விழிப்புனர்வு இல்லை,ஆனால் நன்றாக தெரிந்தவர்கள் இந்த நுங்கை கண்டால் விடமாட்டார்கள்.
இது கிராமப்புறங்களில் அதிகம் கிடைக்கும் ஆனால் நகர்புறங்களில் இந்த நுங்கை பார்ப்பது மிகவும் அரிது,அப்படிப்பட்ட இந்த நுங்கு அதிகம் கோடை காலத்தில் அதிகமாக காணலாம்,நுங்கை பற்றி தெரிந்தவர்கள் நகர்ப்புறங்களில் கிடைக்கும்போது வாய்ப்பை பயன்படுதிகொள்வர்கள்.
உண்மையாக சொல்லப்போனால் நுங்கு பாரம்பரியமான,சத்தான இயற்கை உணவாகும்.கோடை வெட்பத்தை சமாளிக்க நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப பொருட்களை இயற்கை விளைவிக்கிறது அப்படி ஒன்றுதான் நுங்கு இது நமக்கு பலவித நன்மைகளை தருகிறது.
பனை மரத்தில் இரண்டு வகைஉண்டு ஆண்,பெண் என நுங்கு நமக்கு கிடைப்பது பெண் மரத்திலிருந்து தான் கிடைகிறது.
நுன்குவை தோல் எடுத்துவிட்டு சாப்பிடுவதைவிட தோலோடு சாப்பிட்டால் நமக்கு இதில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்,வைட்டமின் சி ஆகியவை நிறைதுள்ளது.
அம்மைநோய் தாக்கியவர்கள் நுங்கு சாபிட்டால் உடல் குளிர்ச்சிபெரும்,இது போன்ற பனை மரங்கள் வடமாநிலங்களில் கிடையாது,தென்மாநிலங்களுக்கு கிடைத்த பெரிய சிறப்புனே சொல்லலாம்,இப்படிப்பட்ட நுங்கு கிடைத்தால் விட்டுடாதிங்க கண்டிப்பா வாங்கி சாப்பிடுங்கள் அப்படி நீங்கள் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கும் நல்லது பனை மரத்தை காக்கவும் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment