Rama Online Tamil: May 2018

Monday, May 28, 2018

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?


இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா கம்பெனியில் இந்த பைக் ரொம்பவே நல்லாவே விற்பனை ஆகுதுன்னு சொல்லலாம்.

இந்த பைக் விலை Rs 72,000-83,000 வரை இருக்கு இதில் நிறைய கலர் கூட இருக்கு உதரணமா நீலம்,கருப்பு,சிவப்பு,சாம்பல் நிறம்,வெள்ளை, போன்ற கலர்கள் இருக்கு இதன் வடிவம் பார்த்தா அபாச்சி பைக் போல தோற்றம் அளிக்கும் அதனாலே எல்லோரும் இந்த பைக் விரும்பி வாங்கினார்கள் இந்த பைக்கில் அணைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது.

1.மைலேஜ்
2.டிஸ்க் பிரேக்
3.டியூப் இல்லாத டயர்
4.டிஜிட்டல் டிஸ்ப்ளே
5.மோனோ சச்பென்செர் என நமக்கு தேவையான முக்கிய அம்சங்கள் உள்ளன.


இந்த பைக் பார்க்க ரொம்பவே நல்லா இருந்தாலும் இவ்வளவு அம்சங்கள் நிறைந்திருந்தாலும் இதில் சில குறைகள் உள்ளன.

ஹோண்டா 16௦ பைக்கின் குறைகள்:

1.இந்த பைக் முதல் குறை அடிக்கடி சச்பென்செர் பிரச்சனை வருகின்றது.

2.இரண்டு பேர்க்கு மேல் உட்காந்தால் பைக் செல்வது ரொம்பவே கடினம் மற்ற 15௦ பைக்கில் கூட இல்லாத பிரச்சனை மூன்று நபர் உட்கார முடியாது.

3.இந்த பைக்கில் முன்னாடி உள்ள டிஸ்க் பம்பர் ஆயில் சீல் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மாதம் தான் வரும் அதற்கு மேல் போனால் ஆயில் சீல் உடைந்து ஆயில் வெளியாகும்.

4.இந்த பைக் மற்ற பைக் போல மூன்று அல்லது நான்கு மாதம் வரை பயன்படுத்த முடியாது நீங்கள் என்னதான் செய்தலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சர்வீஸ் செய்து தான் ஆக வேண்டும்.

5.குறித்த நேரத்தில் நீங்கள் சர்வீஸ் செய்யவில்லை என்றால் புதிய வாகனமாக இருந்தாலும் பயன்படுத்த முடியாது.

6.நாம் கொடுத்து வாங்கும் பணத்திற்கு நிகரான பைக் இது இல்லை,இதை விட குறைந்த பணமும்,குறைந்த cc ம் உள்ள பைக் கொடுக்கும் லைப் இந்த பைக் கொடுப்பதில்லை.

7.புதிதாக இந்த பைக்கை வாங்க விருப்புவர்கள் அந்த பைக் பயன்படுத்திய நபர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்குவது நல்லது.

8.மிக முக்கியமான ஒன்று மோனோ சச்பென்செர் 2 அல்லது மூன்று வருடத்திலே மாற்ற நேரிடும்,இந்த மோனோ சச்பென்செர் அதிக முதுகு வலி ஏற்பட காரணமாக இருக்கும்.

Thursday, May 24, 2018

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க !!!

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க !!!


பொதுவாகவே பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்பு இருக்கும் சாதாரணமாக இருக்கும் வயிறு குழந்தை பெற்றபின் தொப்பை ஏற்படுகிறது,இதை பெண்கள் குறைக்க எவ்வளவோ கஷ்டபடுகின்றனர்.அதிலும் இயற்கையாகவே நடக்கும் பிரசவத்தை விட சிசேரியன் செய்துகொள்பவர்களுக்கு அதிகமாகவே தொப்பை காணப்படுகிறது.

பெண்கள் கர்பமாக இருக்கும் சமயத்தில் அவர்கள் உடலுக்கு சத்து தேவைபடுவதால் அதிக சத்தான உணவுகள் மாத்திரைகள் சாப்பிடுகின்றனர் அப்படி சாப்பிடும்போது அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன,இதனால் பிரசவத்திற்கு பின்பும் அவர்கள் உடலில் அது பெரும் பிரசனையாக உருவெடுகிறது அப்படி ஒன்றுதான் தொப்பை.

இதற்காக உடலை குறைக்க பிரசவத்திற்கு பின் அதிக டயட் இருக்க கூடாத ஏன் என்றால் அவர்களுக்கு போதிய சத்துக்கள் உடலில் இருக்க வேண்டும்.அவர்கள் உடலை குறைக்க அதிக டயட்டில் இருந்தால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் அதனால் குறைவான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் தொப்பையை குறைக்க செய்யலாம்.


 மேலும் பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் என்பதால்  சத்தான உணவை தேடி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது அதனால் உடல் பருமன் மேலும் அதிகமாக கூடும் இப்படி ஏற்படும் உடல் பருமனை உடனே குறைக்க நினைக்காமல் கொஞ்ச கொஞ்சமாக குறைப்பது நல்லது.

பெண்கள் பிரசவத்திற்கு பின் முறையான உணவு பழக்கவழக்கங்கள்,குறைவான டயட் மற்றும் தினமும் காலையில் தேவையான உடற்பயிற்சி கூடவே யோகசனம் செய்தல் நல்லது,மேலும் தொப்பையை குறைக்க பலவிதமான் யோகாசனம் உள்ளது.

தண்ணீர் அதிகமாக பருகவும்

உடல் எடை குறைக்க நினைபவர்கள் முதலில் தினந்தோறும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படி தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற தண்ணீர் உதவியாக இருக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

கொழுப்பு குறைந்த உணவு சாப்பிடவும்

பெண்கள் உடல் எடை குறைக்க நினைபவர்கள் கொழுப்பு அதிகம் இருக்கும் உணவை சாப்பிட கூடாது கொழுப்பு குறைந்த உணவு பொருளை சாப்பிடுவது நல்லது.

கால்சியம் உள்ள பால்

பிரசவத்திற்கு பின் பெண்கள் அதிகம் பால் எடுத்துகொள்வது நல்லது ஏன் என்றால் பெண்கள் தாய்பால் கொடுப்பதால் அவர்களுக்கு கால்சியம் நிறைந்த மாட்டுப்பால் மிகவும் அவசியம்.

பழங்கள்

உடல் எடை குறைக்க நினைக்கும் பெண்கள் பழங்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது மேலும் பழசாறு இன்னும் நல்லது அவர்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் மேலும் அவர்களுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது.

Tuesday, May 22, 2018

முருங்கைகீரை மருத்துவ குணம் தெரியுமா ?

முருங்கைகீரை மருத்துவ குணம் தெரியுமா ?


முருங்கைகீரை எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு கீரை வகை இதில் நிறைய சத்துக்கள் இருக்கிறது என அனைவரும் அறிந்தவைதான்,ஆனாலும் சிலர் இந்த கீரையை சாப்பிடுவதில்லை பொதுவாக நமது தமிழ்நாட்டில்தான் இந்த கீரை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

முருங்கைகீரை  சாப்பிடாத வீடு நான் பார்க்கமுடியாது அதுமட்டும் அல்லாமல் முருங்கைகீரை மரம் பெரும்பாலும் 8௦% வீட்டில் இருக்கும் ஆனாலும் மற்ற கீரைகளை விட இந்த கீரையில் அதிக சத்துக்களும்,அதிக மருத்துவகுணமும் இருக்கு முருங்கைகீரை கசப்பு எதும் இல்லாததால் அணைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் கீரை.

முருங்கைகீரை மட்டும் அல்லாமல் முருங்கை பூ ,முருங்கைக்காய் எல்லாமே பல வழிகளில் நமது உடலுக்கு தேவையான ஒன்று முருங்கைகீரை எளிதாக கிடைக்க கூடிய ஒன்று பெரிதாக பணம் எதும் செலவு இல்லாமல் கிடைக்க கூடிய ஒரு கீரைவகை,சில கீரைகள் சந்தைக்கு போய்தான் வாங்க வேண்டிருக்கும் இல்லை என்றால் கிடைக்காது ஆனால் முருங்கைகீரை நமது வீட்டில் இல்லை என்றால் பக்கத்துவீட்டில் கிடைக்கும் எளிதான நல்ல ஒரு கீரை வகை.


முருங்கைகீரை தரும் சத்துக்கள்:

முருங்கை கீரையில் பலவிதமான சத்துக்கள் உள்ளன இதில் அதிகமாக இரும்புசத்து,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,மற்றும் 4௦ வகையான ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளன.மேலும் 9௦ வகையான சத்துக்கள் உள்ளதாக விஞ்சானிகள் சொல்லுகின்றனர்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு ப்ரோட்டின் உள்ளது,ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின்-சி உள்ளது,வாழைபழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது,கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின்-ஏ உள்ளது,பாலை விட 3 மடங்கு கால்சியம் உள்ளது.

முருங்கைகீரை தரும் மருத்துவ பயன்கள்:

1. முருங்கைகீரையில் அதிகளவு இரும்புசத்து உள்ளத்தால் எலும்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

2.உடல்சூடு அதிகம் உள்ளவர்கள் வாரம் இரண்டுமுறை முருங்கைகீரை சாப்பிட்டுவந்தால் சூடு குறையும்.

3.கண்நோய் கபம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் தொடர்ச்சியாக முருங்கைகீரை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

4.முருங்கைகீரை இலைகள் மற்றும் மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டுவந்தால் கை ,கால் வலிகள் நீங்கும்.

5.முருங்கைகீரை கொஞ்சம் எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களுக்கு உடம்பில் இரத்தம் அதிகம் ஊரும்.

6.முருங்கை இலையில் தாமிரம்,மற்றும் சுண்ணாம்புசத்து அதிகம் உள்ளத்தால் இது சிறுநீரை பெருக்கும்.

7.குழந்தைகளுக்கு முருங்கைகீரை அதிகம் கொடுத்து வந்தால் மூளை வளர்ச்சிபெற உதவியாக இருக்கும்.

8.உடல் தேராமல் இருக்கும் சிலருக்கும் தினமும் முருங்கைகீரை பொரியல் கொடுத்து வந்தால் உடல் தேருவதோடு உடலுக்கு இது அதிக பலத்தை கொடுக்கும்.

பொதுவாகவே முருங்கை மரத்தில இருந்து கிடைக்கும் அனைத்தும் நமது உடலுக்கு நன்மைகளை அள்ளிதர கூடியது,எனவே விலை குறைவு பயன்கள் அதிகம் உள்ள இந்த கீரையை அதிகம் சாப்பிட்டு பயன்பெற வாழ்த்துகிறோம்.

Monday, May 21, 2018

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா ?

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா ?


தண்ணீர் அனைவருக்கும் தேவையான ஒன்று உயிர் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.நாம் தினமும் தண்ணீர் குடிப்பது தவிர்கமுடியாதது ஆனாலும் பெரும்பாலான மக்கள் தண்ணீர் அதிகம் குடிப்பதில்லை,அதிகமாக குடிக்கவில்லை என்றாலும் ஒருநாளைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு தண்ணீராவது குடிக்க வேண்டும்.

சராசரியாக மனிதன் குறைந்தளவு 3-4 லிட்டர் தண்ணீர் தனது உடலுக்கு எடுத்துகொள்ளவேண்டும்,அப்படி எடுத்துகொள்ள வில்லை என்றால் நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பலவித பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

தண்ணீர் வெறும் தண்ணீர் மட்டும் அல்ல அது நமது உடலுக்கு எனர்ஜியை கொடுத்து நமது உடல் செயல்பட காரணமாக இருக்கிறது.உணவு ஒருவேளை சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருப்பது கடினம் அதிலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது.

ஆனாலும்,தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இன்னும் அதிக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நமக்கு பல வழிகளில் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன,அதிலும் காலையில் சிலர் வெந்நீர் குடித்தால் வயிறு குறையும் என்று வெந்நீர் குடிப்பார்கள் அதைவிட  சாதாரண பச்சைதண்ணீர்  குடிப்பது தான் நல்லது.

காலை எழுந்தவுடன் பல் சுத்தம் செய்துவிட்டு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது நின்றுகொண்டு குடிப்பதை விட உட்கார்ந்து குடித்தால் இன்னும் பலவித நன்மைகள் நமக்கு வந்து சேரும்.



தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

* தண்ணீர் காலையில் வெறும்வயிற்றில் தினமும் குடிப்பதால் நமக்கு எனர்ஜி கிடைப்பதோடு,தண்ணீர் உங்கள் வயிற்றை நிரப்பி மலம் முழுமையாக வெளியேற உதவுகிறது.

* தண்ணீர் ஒருவர் அதிகமாக குடிப்பதால் அடிக்கடி ஏற்படும் தலைவலி நிற்க உதவியாக இருக்கும்.

*தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் ரத்தம் சுத்தமாக வைத்துகொள்ள பெரிதும் உதவியாக இருக்கும். 

* சிறு பிள்ளைகளுக்கு தினமும் காலையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை சொல்லிகொடுக்க அது அவர்களது உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

* நமது மூளையில் அதிகம் தண்ணீர் இருப்பதால் மேலும் மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு தண்ணீர் அதிகமாக தேவைபடுவதால்  தண்ணீர் மிக அவசியம்.

Friday, May 18, 2018

கோவக்காயின் மருத்துவ குணங்கள் !!!

கோவக்காயின் மருத்துவ குணங்கள் !!!


கோவக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்,கோவக்காய் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பச்சைகிளி ஏன் என்றால் நம்ம ஊரில் கோவக்காய் அதிகமாக கிளிகளுக்கு கொடுப்பார்கள் நன்கு பழுது சிவப்பு நிறம் வந்ததும் அந்த கோவப்பழத்தை அனைவரும் கிளிக்கு கொடுப்பார்கள்.

அதற்குமுன்பு இந்த கோவக்காயை பள்ளிகூடங்களில் எழுதுபலகை சுத்தம் செய்ய பயன்படுத்தினார்கள்.பெரும்பாலும் இந்த காய்களை கிளிகளுக்கும் மற்றும் பிளாக் போர்ட் பயன்படுத்தினார்கள்.இந்த கோவக்காயை அதிகம் சமைபவர்கள் மிகவும் குறைவு,ஆனால் வெளிமாநிலங்களில் அதிகம் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.இருப்பினும் இதில் அதிக சத்துக்கள் உள்ளன.



கோவக்காயில் நமக்கு தரும் சத்துக்கள்:

கோவக்காயில் பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன மற்றும் இந்த கோவக்காயை நீரழிவு நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் நீரழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் இது பச்சை நிற காய்கறி என்பதால் நமக்கு பலவித நன்மைகள் தருகிறது.

இதில் வைட்டமின் A,கால்சியம்,பாஸ்பரஸ்,போலிக் ஆசிட்,அயன் இது போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்ப்பதால் நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்கிறது.அதுமட்டும் அல்லாமல் ஆரம்பநிலையில் உள்ள ஆஸ்துமாவை தடுக்க உதவியாக இருக்கிறது.

இந்த கோவக்காய் பாவக்காய் போன்று கசப்பு தன்மை இல்லாததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு சாப்பிடும் ஒன்றாக உள்ளது.கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதோடு இதில் அதிகம் நமக்கு தேவைப்படும் நார்சத்து உள்ளது.கோவக்காய் மட்டும் அல்லாமல் இதன் இலை,பூ,தண்டு,வேர் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை அதனால் கோவக்காய் அனைவரும் சமைத்து சாப்பிடுவது நல்லது.


கோவக்காய் தரும் நன்மைகள்:

  • கோவக்காய் அதிகம் உணவில் சேர்த்துகொள்வதால் மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது.
  • தோளில் ஏற்படும் பிரச்சனை அதாவது தோல்நோய் வராமல் தடுத்து நிறுத்த உதவியாக இருக்கிறது.
  • சக்கரைநோய் கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள உதவியாக இருக்கிறது.
  • உடலுக்கு பளபளப்பை கொடுக்கும் அதிகமாக கோவக்காய் உணவில் சேர்ப்பதன் மூலம்.
  • இது கோவக்காய் எளிதில் ஜீரணம் ஆவது கடினம் அதனால் இரவில் சேர்த்துகொள்ள வேண்டாம்.
  • கோவக்காய் உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் வாயு,பித்தம்,போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கலாம்.
  • இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு சாப்பிட்டால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நிற்கும்.
  • இதனை சிலர் சாலட்டுடன் சேர்த்து சாப்பிடுவார்கள் அப்படி பச்சையாக சாப்பிடுவதால் இன்னும் கோவக்காயின் சத்து நேரடியாக கிடைக்கிறது.
  • கோவக்காயை மென்று சாப்பிடுவதால் நாக்கில் ஏற்படும் புண்கள் சரியாகிவிடும் மற்றும் வாயிற்று புண் உள்ளவர்கள் கோவக்காய் சாப்பிட்டுவந்தால் புண் எளிதில் குணமாகும்.
  • கோவக்காய் பச்சடி ஒரு சிறந்த மருத்துவகுணம் நிறைந்த ஒன்றுன்னு சொல்லலாம்.
கோவக்காய் நன்மைகள் தெரியாமல் பயன்படுத்துபவர்கள் இந்த அணைத்து நன்மைகளையும் தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.உணவிலே மருந்து இருக்கும்போது எதற்காக இங்கிலீஷ் மருந்து.



Wednesday, May 16, 2018

சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது தெரியுமா ?

சமையலுக்கு  சிறந்த எண்ணெய் எது தெரியுமா ?


சமையலுக்கு சிறந்த எண்ணெய் எதுன்னு பார்த்த அது நம்ம நல்லெண்ணெய் தான் நாம் எவ்வளவோ விளம்பரம் பார்த்து பல எண்ணைகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவோம் ஆனாலும் சரியான அவர்கள் அதாவது விளம்பரத்தில் அவர்கள் சொல்லும் நன்மைகள் நமக்கு கிடைக்காது.

ஒவ்வொரு விளம்பரம் பார்த்து நாம் ஏமாந்ததுதான் மிச்சம் அப்படி பார்க்கையில் நமக்கு நிறைய நன்மைகளை அள்ளிதரகூடிய நமது நாட்டு மரசெக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் நீங்கள் விளம்பரத்தில் பார்க்கும் நன்மைகளை விட இன்னும் நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பக்கெட்டில் விற்கும் நல்லெண்ணெய் வாங்குவதை விட செக்கில் அரைத்து கொடுக்கப்படும் எண்ணெய் சுத்தமானதாக இருக்கும் அதுமட்டும் அல்லாமல் நமக்கு தேவையான சத்துக்கள் வெளியேறாமல் நேரடியாக நமக்கு கிடைக்கும்.


நம் முன்னோர்கள் அந்த காலத்திலே சொல்லிவைத்தது.

* தேங்காய் எண்ணையில் இருந்து எடுப்பது தேங்காய்எண்ணெய்.

* கடலையில் இருந்து எடுப்பது கடலெண்ணெய்.

* வேப்பங்காய் இருந்து எடுப்பது வேப்பெண்ணை. 

அப்படி பார்த்தல் எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எள்ளெண்ணை என சொல்வதற்கு பதிலாக எதற்காக "நல்லெண்ணெய்" என்று சொன்னார்கள் தெரியுமா நமக்கு பல வழிகளிலும் நன்மைகளை அள்ளிதருவதால் தான் அப்படி அதற்கு பெயர் வைத்திருகிறார்கள்.எனவே அதனை நான் அறிந்து நல்லெண்ணெய் அதாவது நாட்டு மரசெக்கு நல்லெண்ணெய் அனைவரும் பயன்படுதுவது நல்லது.


பலவித நோய்களை தடுக்கும் நல்லெண்ணெய்:

இன்றைய காலகட்டத்தில் நிறையபேருக்கு பலவிதமான நோய்கள் வருகின்றது,இந்த நல்லெண்ணெய் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தினால் இது மாதிரியான நோய்களில் இருந்து விடுபடலாம்.

1.சக்கரைவியாதி

2.உடல்பருமன்(தொப்பையாக இருப்பது)

3.தைராய்டு

4.கேன்சர்

5.இதயத்தில் அடைப்பு

6.குழந்தைஇன்மை

7. ஆண்மை குறைபாடு.

                                 இப்படி பலவிதமான நோய்களுக்கு நாம் ஆளாகும் நிலைமை வருகிறது.

நல்லெண்ணெய் தரும் நன்மைகள்:

* மரசெக்கு நல்லெண்ணெய் இயந்திரத்தில் தயாரிக்கபடுவதில்லை அதனால் எந்தவித கலப்படம் இன்றி சுத்தமான நல்லெண்ணெய் நமக்கு கிடைக்கும்.

* இந்த நல்லெண்ணெய் அணைத்து விதமான சமையலுக்கும் பயன்படுத்தலாம் சமையலின் சுவையும் மாறுபடும்.

* இந்த நல்லெண்ணெய் உச்சதலை முதல் கால் வரை தேய்ப்பதற்கு பயன்படுத்தலாம்.

* உடல் சூடு மற்றும் உஷ்ணத்தை தடுப்பதோடு நமக்கு பல மருத்துவ குணத்தை கொடுக்கிறது.

* கண்கள் மற்றும் காதுகளில் இருக்கும் தேவையற்ற அழுக்கை நீக்க பயன்படுத்தலாம்.

* நல்லெண்ணெய் அதிகம் பயன்படுத்துவதால் தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.அதுமட்டும் அல்லாமல் நம் ஆயுளை நீட்டிக்க இந்த நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.




Tuesday, May 15, 2018

சரும அழகை பாதுகாக்கும் பீட்ரூட் ஜூஸ்

சரும அழகை பாதுகாக்கும் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் அனைவருக்கும் தெரிந்த ஒரு காய்கறிகளில் ஒன்று அதுமட்டும் அல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று,இந்த பீட்ரூட்டை நாம் சமையலில் பொரியலாகவும்,குழம்புக்கு தேவையான கையாக பயன்படுத்துவோம்.

ஆனால்,இந்த பீட்ரூட்டை ஜூஸ் செய்து சாப்பிடும் பழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு என்றால் குறைவு தான் ஏன் என்றால் சமையலுக்கு மட்டும் தான் நிறையப்பேர் பயன்படுத்துவார்கள் ஜூஸ் செய்து அருந்துவதில்லை அப்படி ஜூஸ் செய்து அருந்துவதால் நமக்கு எராளமான நன்மைகளை அள்ளிதரகூடிய ஒன்று பீட்ரூட்.

தற்போது காலகட்டத்தில் 95% பேர் தங்கள் அழகை பராமறிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.அதற்காக நாம் நிறைய அழகு சாதனாபொருட்களை பயன்படுத்தி வருகின்றோம்,அப்படி நாம் பயன்படுத்தும் பொருளில் நிறைய ரசாயனங்கள் கலக்கபடுகிறது.

அதற்கு பதிலாக இயற்கையாகவே கிடைக்கும் இது மாதிரியான காய்கறிகளை அழகு சாதனா பொருளாக பயன்படுத்தலாம்.நிறையப்பேர் பீட்ரூட் உடலுக்கு மட்டும்தான் நல்லது என்று நினைகின்றனர் அது தவறு பீட்ரூட் அழகை பராமரிக்கவும் பயன்படுத்தபடுகிறது.சிலர் உதட்டில் சாயமாக பயன்படுத்துவார்கள் சிலர் தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள் ஆனால் கோடைகாலத்தில் சருமத்தை பராமரிக்க பயன்படுத்தலாம் சிறந்த ஒரு இயற்கை பொருள்,இன்னும் நிறையபேர் நகரங்களில் பெண்கள் அதிகமாக பீட்ரூட் ஜூஸ் பருகுவதுண்டு.



பீட்ரூட் நன்மைகளை பற்றி பார்ப்போம்:

1.முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் பீட்ரூட் ஜூஸ் 1 ஸ்பூன் கொஞ்சம் சக்கரை கலந்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.

2.கழுத்தில் உள்ள கருமையை நீக்க பீட்ரூட் ஜூஸ் கொஞ்சம் எடுத்து தேவையான அளவு கருமை இருக்கும் இடத்தில் தடவி நன்கு உலர்ந்தபின் கழுவ வேண்டும் அப்படி தினமும் செய்து வந்தால் கருமை மறையும்.

3.சருமம் அதிக வறட்சியாக இருந்தால் பீட்ரூட் ஜூஸ்,தேன்,மற்றும் கொஞ்சம் பால் கலந்து முகத்தில் மாஸ்க் ஆக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

4.பிங்க் நிற உதடுகள் தேவை என்றால் தினமும் படுக்கும் முன்பு கொஞ்சம் பீட்ரூட் ஜுஸை உதட்டில் தடவி காலையில் கழுவினால் நல்லது.

5.முகத்தில் சிலருக்கு எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் அப்படி உள்ளவர்கள் பீட்ரூட் ஜுஸை முகத்தில் தடவி உலர்ந்த பிறகு பாலை கொண்டு துடைத்து எடுத்தல் நல்ல பொலிவு வருவதுடன் எண்ணெய் பசையை போக்கலாம்.

6.முகம் ஒரே நாளில் பொலிவுடன் காண பீட்ரூட் ஜூஸுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீருடன் முகத்தை துடைத்து எடுத்தல் முகம் பொலிவுடன் காணப்படும்,அதிலும் இதை இரவு படுக்கும் முன் செய்தல் இன்னும் பொலிவுடன் காணலாம்.


Monday, May 14, 2018

கீரைகளை ஏன் சாப்பிடனும் தெரியுமா ?

கீரைகளை ஏன் சாப்பிடனும் தெரியுமா ?

நமது உணவு பழக்க வழக்கங்களில் முக்கியமானதாகவும் அதிக சத்துக்களை நமக்கு தரக்கூடிய ஒரு உணவு பொருள் கீரைவகைகள்.அப்படிப்பட்ட கீரைகளை நாம் ஏன் சாப்பிடவேண்டும் அதை நாம் ஏன் வெறுக்க கூடாது அதைப்பற்றி பார்ப்போம்.

நம் முன்னோர்கள் "உணவே மருந்து"மருந்தே உணவு என சொல்லியது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று அப்படிப்பட்ட வரிசையில் கீரையும் ஒன்று மற்றும் உணவில் காய்கறிகள் கீரை வகைகள் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் நமக்கு ஆலோசனை கொடுப்பார்கள்.

கீரைகள் நமக்கு நிறைய நன்மைகளை தருகின்றது அப்படிப்பட்ட நன்மைகளை தரக்கூடிய கீரைகள் விளையும் குறைவு மற்றும் எளிதாக கிடைக்க கூடிய ஒன்று.அப்படிப்பட்ட கீரை வகைகளை தினசரி உணவில் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்லணும்.இந்த கீரை வகைகளை நாம் ஏன் சாப்பிடனும் தெரியுமா.

கீரைகள் எளிதாக செரிமானம் ஆககூடிய ஒரு சத்தான உணவு பொருள் கீரை வகைகள் பெரும்பாலும் 4௦ வகைகளுக்கு மேல் உள்ளது,ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு பலனை தரக்கூடிய ஒன்று அப்படி பார்க்கையில் முருங்ககீரை அதிகமாக இரும்புசத்து உள்ளது.

தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கீரை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது,அதிலும் 4௦ வயதிற்குமேல் பெண்கள் இதனை சேர்த்து கொண்டால் ஹீமோகுளோபின் பிரச்சனை,கால்சியம் குறைபாடு,மூட்டுவலி போன்ற பிரச்சனைக்கு கீரை நல்ல பலன் தரும்.

கீரைகள் அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டால் குழந்தைகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வாரம் இருமுறை சாப்பிடலாம் அப்படி இல்லை என்றால் ஒருமுறையாவது சேர்த்துகொள்வது அவசியம்.

எந்தவயதினர் கீரை சாப்பிடலாம்:


தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிகம் கீரைகளை விரும்பி சாப்பிடுவதில்லை ஏன் என்றால் பெரியவர்கள் வீட்டில் அதிகம் கீரை சமைத்து சாப்பிட விரும்புவது இல்லை,மாமிசத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அதைவிட சத்து அதிகம் இருக்கும் கீரைகளுக்கு கொடுப்பதில்லை.

பெரும்பாலும் சிலர் கீரையின் அவசியத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் 8 மாதத்தில் இருந்தே கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்,சிலர் 1 வருடம் கடந்ததும் கீரையை நன்கு வேகவைத்து கொடுக்க பழகலாம் அப்படி குழந்தை பருவத்தில் இருந்தே பழகினால் பிற்காலத்தில் அவர்கள் கீரைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை விரும்பி சாபிடுவர்கள்.

கீரைகள் சாப்பிடும் முறை


கீரைகள் நமது உடலுக்கு நல்லது என்றாலும் எப்போதெல்லாம் இந்த கீரை வகைகளை சேர்த்து கொள்ளலாம்.

பெரும்பாலும் கீரை வகைகளை காலை வேளையில் உணவில் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது,அதிலும் பெரியவர்கள்,நோயாளிகள் கீரைகளை காலையில் சேர்த்து கொள்வது நல்லது.இரவு நேரங்களில் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் அப்படியே இரவு நேரங்களில் சேர்த்து கொள்வதாக இருந்தால் இரவு 8 மணிக்கு முன்பே சாப்பிடுவது நல்லது.1௦ அல்லது 11 மணிக்கு மேல் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.

இப்படிபட்ட கீரைகளை நாம் தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது அதுமட்டும் அல்லாமல் கீரையை சமைக்கும் போது அதன் பச்சை நிறம் மாறாமல் சமைத்தால் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். 

விந்து குறைபாடு உள்ளவர்கள் அதிகமாக உணவில் கீரைகளை சேர்த்துகொண்டால் விந்து கெட்டியாகவும் மேலும் அதிகரிக்கவும் கீரை பெரிதும் உதவியாக இருக்கும். 

Friday, May 11, 2018

தேங்காய் எண்ணையை தினமும் இரவில் தொப்புளில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தேங்காய் எண்ணையை தினமும் இரவில் தொப்புளில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?


தேங்காயில் இருந்து எடுக்கபடும் தேங்காய் எண்ணெய் பல வழிகளில் பல்வேறு நன்மைகளை தருகிறது.தேங்காய்எண்ணெய் ஆசியா,ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பல வருடங்களாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.தேங்காய்எண்ணையில் நமக்கு தேவையான சாச்சுரேட்டட் மற்றும் ஊட்டசத்து அதிகஅளவு உள்ளது மேலும் தேங்காய்எண்ணையில் ஆயுளை மேம்படுத்தும் நல்ல பொருட்கள் அடங்கியுள்ளது.

தேங்காய் எண்ணெய் தினமும் இரவில் தொப்புளில் வைப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

சளிக்கு பலன் கிடைக்கும்


சளி பிடித்துள்ளதா உங்களுக்கு தினமும் இரவில் படுக்கும்போது மூன்று அல்லது நான்கு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவிபடுங்கள் இது உள்உறுப்புகளை பாதுகாப்பதோடு சளி தொல்லைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

கண் பார்வை




தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கண்களில் ஏற்படும் வறட்சியை சரிசெய்து மோசமான கண்பார்வையில் இருந்து தடுக்கும்.

தூக்கமின்மை


தூக்கமின்மை இருப்பவர்கள் தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்து படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்,சந்தேகம் உள்ளவர்கள் இன்று இரவு செய்து பாருங்கள் அதன் பலன் கிடைக்கும்.

கருவளம் மேம்படும்


தினமும் தேங்காய் எண்ணெய் தொப்புளில் இரவில் வைப்பதால் கருத்தரிக்க வாய்ப்பு அதிக அளவு உள்ளது.மேலும் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் வயிறு பகுதியில் உள்ள கொழுப்பு கரைய உதவியாக இருக்கும்.


தேங்காய் எண்ணெய் ஒவ்வொரு நோய்க்கும் பயன்படுத்தும் நாம் அதை உணவில் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்,நாம் முன்னோர்கள் உணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள் உணவின் மூலம் உட்கொள்வதால் உடலில் அணைத்து பகுதிகளுக்கும் சென்று நேரடியாக பலனை அள்ளிதரகூடிய ஒரு இயற்கை மருந்து தேங்காய் எண்ணெய்.

Thursday, May 10, 2018

வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடலாமா ?

வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடலாமா ?



வெந்தயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று சமையல்ல பல வழிகளில் பயன்படுத்தகூடிய மற்றும் மருத்துவ குணம் நிறைந்த ஒன்றுதான் வெந்தயம்.பொதுவாக வெந்தயத்தை வெயில் காலங்களில் சூடு அதிகமாகி சிறுநீர் கழிக்கும்போது வலி போன்றவற்றை சந்திப்போம்,இது போன்ற தருணத்தில் அந்த வலியை சரிசெய்ய மிக எளிமையான ஒன்றுதான் வெந்தயம் கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கொஞ்சம் வெந்தயம் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க இதுமாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


இது மாதிரி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் வெட்பம் குறைந்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்.மேலும் வெந்தயம் தினமும் சாப்பிடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதைபற்றி பார்ப்போம்.

இதயநோய்


வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயநோய் வருவது குறைவதோடு,வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்காது.

நீரழிவு நோய்


வெந்தயத்தில் உள்ள அமினோஆசிட் இன்சுலின் உற்பத்தியை தூண்டும் என்பதால் நீரழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயம் வெறும்வ யிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது

உடல் சூடு குறையும்


வெயில் நாட்களில் உடல் சூடு அதிகமாகி அவஸ்தை படுபவர்கள் தினமும் வெறும் வயிற்றில் கொஞ்சம் வெந்தயம் சாப்பிட்டுவந்தால் உடல் சூடு குறையும்.

கொலஸ்ட்ரால் குறைய


வெந்தயத்தில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் தன்மையை குறைக்கும் சக்தி உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட வெந்தயத்தை அரைத்து பொடியாக்கி கொஞ்சம் தண்ணீர் கலந்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மலசிக்கல் 


மலசிக்கல் உள்ளவர்கள் வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் மலசிக்கல் பிரச்சனை சரியாகும் ஏன் என்றால் வெந்தயத்தில் கரையும் நார்சத்து இருக்கிறது.

சிறுநீரக கற்கள்


சிறுநீரக கல் பிரச்சனையல் அவஸ்தை படும்பவர்கள் வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் நச்சுகளை கரைக்கும் தன்மையுள்ளது.

பெண்கள் மார்பகம் பெரிதாக்க


சில பெண்களுக்கு மார்பகம் சிறிதாக காணப்படும் அதனால் சிலர் மார்பகம் பெரிதாக வைத்துகொள்ள ஆசை படுவார்கள் அப்படி நினைக்கும் பெண்கள் தினமும் தவறாமல் வெந்தயம் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

.

Tuesday, May 8, 2018

நல்லெண்ணெய் மகத்துவத்தை நாம் மறந்தது ஏன்?

நல்லெண்ணெய் மகத்துவத்தை நாம் மறந்தது ஏன்?


பொதுவாகவே நல்லெண்ணெய் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது தீபாவளி தான் ஏன்னா அன்றையதினம் மட்டும் தான் நாம் நல்லெண்ணெய் பயன்படுத்துவோம் தலைக்கு தேய்த்து குளிக்க,பின்பு அந்த எண்ணெய் பயன்படுத்துவது இல்லை.

நம் முன்னோர் சொல்லியவை:



நமது முன்னோர்கள் நல்லெண்ணெய் எதற்கெல்லாம் பயன்படுத்தினார்கள் தெரியுமா தலைக்கு தேய்த்து குளிப்பார்கள் வாரத்திற்கு இரண்டு முறை,தலைக்கு மட்டும் அல்லாமல் காதுகளில் கொஞ்சம்,கண்களில் கொஞ்சம்,ஏன் தொப்புளில் கூட குளிக்கும்போது ஊற்றி நல்லா தேய்த்து குளிப்பார்கள் நமது உடலில் எங்கெல்லாம் சூடு அதிகமாக இருக்குமோஅங்கெல்லாம் பயன்படுத்துவார்கள்.அதுமட்டும் அல்லாமல் 199௦ முன்பு சமையலுக்கு கூட இந்த நல்லெண்ணெய் பயன்பாடு அதிகமாக இருந்தது.நமது முன்னோர்களும் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் ஆனால் இப்போது இந்த எண்ணையில் நிறைய கலப்படம் அதுமட்டும் அல்லாமல் நாம் நல்லெண்ணெய் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நல்ல எண்ணைக்கு பதிலாக கெட்ட எண்ணெய் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.

நல்லெண்ணெய் தரும் நன்மைகள்:



1.நல்லெண்ணெய் வாரம் இருமுறை தேய்த்து குளித்தல் உடல் குளிர்சிபெரும்,உடலும் ஆரோக்கியமாக இருக்க நல்லெண்ணெய் பயன்படுகிறது.

2.எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் பயபடுதுவதால் புத்திக்கு தெளிவு உண்டாகும்,கண்களுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாகும்,மனதிற்கு  நல்ல மகிழ்ச்சி உண்டாகும்,மற்றும் நல்ல தேகபூஸ்தி உண்டாகும்.

3.கண்கள் சம்பந்தப்பட்ட நோய்,செவி நோய் போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டவை இந்த நல்லெண்ணெய்.

4.ஆண்களை பொறுத்தவை சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.பெண்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

5.தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி வாய் கொப்பளித்தால் பற்கள் பலம் பெரும் மற்றும் வாய்துர்நாற்றத்தை தடுக்கலாம்.


Monday, May 7, 2018

கேழ்வரகு சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ?

கேழ்வரகு சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ?


கேழ்வரகு சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்குதுன்னு தெரியுமா,கேழ்வரகில் கொழுப்பு சத்து குறைந்தளவு உள்ளது அதுமட்டும் அல்லாமல் நிறைவுறா கொழுப்பு எனப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகளவு உள்ளது.



இது போன்ற தானியங்கள் செரிமானத்துக்கு ரொம்பவும் நல்லது,அதுமட்டும் அல்லாமல் குளுமை தரக்கூடியது.கேழ்வரகு தானியங்களில் மிகவும் சத்தான தானிய வகை,அலர்ஜி உள்ளவர்கள் கூட கேழ்வரகு சேர்த்துக்கொள்ளலாம்.இது உடலில் கொழுப்பை தங்கவிடாமல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுவடையும் மேலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைக்கு கால்சியம் அதிகம் தேவை என்பதால் கேழ்வரகு கஞ்சி,கூழ்,மற்றும் அடைகள் செய்து சாப்பிடுவது உடலுக்கு ரொம்ப நல்லது.

கேழ்வரகு மெதுவாக செரிமனமவதால் அதிக கலோரிகளை உட்கொள்வதை தடுக்கலாம்.அதுமட்டும் அல்லாமல் கேழ்வரகில் நார்சத்து அதிகளவு உள்ளது.

அதிகளவு கேழ்வரகு உட்கொள்ளுதல்,உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.எனவே சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்கள் உட்கொள்ள கூடாது.

கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது.அதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

Wednesday, May 2, 2018

உணவை கையால் சாப்பிடுவது ஏன் தெரியுமா?

உணவை கையால் சாப்பிடுவது ஏன் தெரியுமா?

நாம் உணவை எதற்காக கைகளால் சாப்பிடுகின்றோம் தெரியுமா,நமது நாட்டில் அதாவது இந்தியாவில் உணவை கைகளால் சாப்பிடுவதுதான் பாரம்பரிய வழக்கம்.நம் இந்தியா மட்டுமல்லாமல் இன்னும் சில நாடுகள் ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு மற்றும் ஆசியா போன்ற நாடுகளிலும் உணவை கைகளால்தான் சாப்பிடுகிறார்கள் அவர்கள் ஸ்பூன்,போர்க் மற்றும் கத்தி பயன்படுத்துவதில்லை.

இன்றைய காலத்தில் நாகரீகம் என்னும் பெயரில்  அனைவரும் ஸ்பூன் மற்றும் போர்க் பயன்பாடு அதிகமாக இருக்கு அதனால் நமது பழக்க வழக்கங்களை மறந்து வருகின்றனர்.

நமது கைகளால் நாம் உணவு உண்ணுவதால் நமக்கு ஏரளமான நன்மைகள் இருக்கு உணவு என்பது வெறும் உணவு மட்டும் அல்ல அது ஒரு உணர்வு பூர்வமான ஒரு விஷயம் மற்றும் கவனமுள்ள ஒன்று.அணைத்து உணர்வுகளையும் உணர்ந்து நாம் சாப்பிடுகிறோம்,
* பார்வை

* வாசனை

* சுவை

* கேட்பது

* தொடுதல்
 போன்ற  அனைத்தையும் உணர்ந்து சாப்பிடுகிறோம்.


நாம் உணவை கையால் சாப்பிடும்போது உணவு,உடல்,மனம் மற்றும் ஆன்மா என அனைத்தையும் ஒன்றிணைகிறது.மேலும் இது சாப்பாட்டு முறையை மென்மையாக்குகிறது,இந்த காரணத்தினால் தான் சில வெளிநாடுகளில் கைகளால் சாப்பிடுவதை ஊக்குவிக்கின்றனர்.இன்றைய நாகரீக உலகின் பலர் கைகளால் சாப்பிடுவதை விரும்புவதில்லை அதுமட்டுமல்லாமல் அதை ஒரு அருவெறுப்பான செயலாக பார்க்கின்றனர்.கைகளால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அவர்களுக்கு தெரியாததே அதற்கு காரணம்.


கைகளால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1.உண்ணுதல் என்பது உணர்வு மற்றும் பேரானந்தத்தை கொடுக்கும் ஒன்று,ஆயுர்வேத படி கையில் இருக்கும் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வரலாறு உண்டு.அதில் பெருவிரல் ஆகாயம்,ஆள்காட்டி விரல் காற்று,நடுவிரல் நெருப்பு,மோதிர விரல் தண்ணீர்,சுண்டுவிரல் நிலம் என நாம் முன்னோர்கள் சொல்லிவைத்தது.இவை ஐந்தும் உங்களை சாப்பிட தூண்டுகிறது.

2.பொதுவாக நம் உள்ளங்கை மற்றும் விரலில் பாக்டீரியா இருக்கும் இதில் நல்ல பாக்டீரியா மற்றும் கெட்ட பாக்டீரியா கலந்திருக்கும் நாம் சாப்பிடும் முன் கைகளை சுத்தம் செய்வதால் கெட்ட பாக்டீரியா அழிந்து நல்ல பாக்டீரியாக்கள் மட்டும் இருக்கும் இது வயிற்றில் ஏற்படும் கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றது.இது போன்ற நல்ல விஷயம் ஸ்பூன் பயன்படுத்துவதால் நமக்கு அது கிடைக்காது.



3.ஸ்பூன் மற்றும் போர்க் பயன்படுத்துபவர்கள் அவர்கள் சாப்பிடும் உணவானது எளிதாகவும்,வேகமாகவும் வயிற்றுக்குள்ளே செல்கிறது.அப்படி உண்பதால் அது உடலில் இரத்த சக்கரை அளவை ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி டைப்-2 சக்கரைநோய் அபாயத்தை அதிகரிக்கும்,ஆய்வில் கைகளால் சாப்பிடுபவர்களை விட 2.5 சதவீதம் ஸ்பூனில் சாப்பிடுபவர்களுக்கே அதிகம் இரத்த சக்கரை அளவு அதிகமாக வருகின்றது.

4.கையில் சாப்பிடுபவர்கள் உணவு உண்ணும் போது அதன் உணர்வையும் உணவின் ருசியையும் உணர்ந்து சாப்பிடுகின்றனர்,இந்த உணர்வு ஸ்பூனில் சாப்பிடுபவர்களுக்கு கிடைப்பதில்லை.


இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...