Rama Online Tamil: முருங்கைகீரை மருத்துவ குணம் தெரியுமா ?

Tuesday, May 22, 2018

முருங்கைகீரை மருத்துவ குணம் தெரியுமா ?

முருங்கைகீரை மருத்துவ குணம் தெரியுமா ?


முருங்கைகீரை எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு கீரை வகை இதில் நிறைய சத்துக்கள் இருக்கிறது என அனைவரும் அறிந்தவைதான்,ஆனாலும் சிலர் இந்த கீரையை சாப்பிடுவதில்லை பொதுவாக நமது தமிழ்நாட்டில்தான் இந்த கீரை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

முருங்கைகீரை  சாப்பிடாத வீடு நான் பார்க்கமுடியாது அதுமட்டும் அல்லாமல் முருங்கைகீரை மரம் பெரும்பாலும் 8௦% வீட்டில் இருக்கும் ஆனாலும் மற்ற கீரைகளை விட இந்த கீரையில் அதிக சத்துக்களும்,அதிக மருத்துவகுணமும் இருக்கு முருங்கைகீரை கசப்பு எதும் இல்லாததால் அணைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் கீரை.

முருங்கைகீரை மட்டும் அல்லாமல் முருங்கை பூ ,முருங்கைக்காய் எல்லாமே பல வழிகளில் நமது உடலுக்கு தேவையான ஒன்று முருங்கைகீரை எளிதாக கிடைக்க கூடிய ஒன்று பெரிதாக பணம் எதும் செலவு இல்லாமல் கிடைக்க கூடிய ஒரு கீரைவகை,சில கீரைகள் சந்தைக்கு போய்தான் வாங்க வேண்டிருக்கும் இல்லை என்றால் கிடைக்காது ஆனால் முருங்கைகீரை நமது வீட்டில் இல்லை என்றால் பக்கத்துவீட்டில் கிடைக்கும் எளிதான நல்ல ஒரு கீரை வகை.


முருங்கைகீரை தரும் சத்துக்கள்:

முருங்கை கீரையில் பலவிதமான சத்துக்கள் உள்ளன இதில் அதிகமாக இரும்புசத்து,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,மற்றும் 4௦ வகையான ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளன.மேலும் 9௦ வகையான சத்துக்கள் உள்ளதாக விஞ்சானிகள் சொல்லுகின்றனர்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு ப்ரோட்டின் உள்ளது,ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின்-சி உள்ளது,வாழைபழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது,கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின்-ஏ உள்ளது,பாலை விட 3 மடங்கு கால்சியம் உள்ளது.

முருங்கைகீரை தரும் மருத்துவ பயன்கள்:

1. முருங்கைகீரையில் அதிகளவு இரும்புசத்து உள்ளத்தால் எலும்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

2.உடல்சூடு அதிகம் உள்ளவர்கள் வாரம் இரண்டுமுறை முருங்கைகீரை சாப்பிட்டுவந்தால் சூடு குறையும்.

3.கண்நோய் கபம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் தொடர்ச்சியாக முருங்கைகீரை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

4.முருங்கைகீரை இலைகள் மற்றும் மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டுவந்தால் கை ,கால் வலிகள் நீங்கும்.

5.முருங்கைகீரை கொஞ்சம் எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களுக்கு உடம்பில் இரத்தம் அதிகம் ஊரும்.

6.முருங்கை இலையில் தாமிரம்,மற்றும் சுண்ணாம்புசத்து அதிகம் உள்ளத்தால் இது சிறுநீரை பெருக்கும்.

7.குழந்தைகளுக்கு முருங்கைகீரை அதிகம் கொடுத்து வந்தால் மூளை வளர்ச்சிபெற உதவியாக இருக்கும்.

8.உடல் தேராமல் இருக்கும் சிலருக்கும் தினமும் முருங்கைகீரை பொரியல் கொடுத்து வந்தால் உடல் தேருவதோடு உடலுக்கு இது அதிக பலத்தை கொடுக்கும்.

பொதுவாகவே முருங்கை மரத்தில இருந்து கிடைக்கும் அனைத்தும் நமது உடலுக்கு நன்மைகளை அள்ளிதர கூடியது,எனவே விலை குறைவு பயன்கள் அதிகம் உள்ள இந்த கீரையை அதிகம் சாப்பிட்டு பயன்பெற வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...