உணவை கையால் சாப்பிடுவது ஏன் தெரியுமா?
நாம் உணவை எதற்காக கைகளால் சாப்பிடுகின்றோம் தெரியுமா,நமது நாட்டில் அதாவது இந்தியாவில் உணவை கைகளால் சாப்பிடுவதுதான் பாரம்பரிய வழக்கம்.நம் இந்தியா மட்டுமல்லாமல் இன்னும் சில நாடுகள் ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு மற்றும் ஆசியா போன்ற நாடுகளிலும் உணவை கைகளால்தான் சாப்பிடுகிறார்கள் அவர்கள் ஸ்பூன்,போர்க் மற்றும் கத்தி பயன்படுத்துவதில்லை.
இன்றைய காலத்தில் நாகரீகம் என்னும் பெயரில் அனைவரும் ஸ்பூன் மற்றும் போர்க் பயன்பாடு அதிகமாக இருக்கு அதனால் நமது பழக்க வழக்கங்களை மறந்து வருகின்றனர்.
நமது கைகளால் நாம் உணவு உண்ணுவதால் நமக்கு ஏரளமான நன்மைகள் இருக்கு உணவு என்பது வெறும் உணவு மட்டும் அல்ல அது ஒரு உணர்வு பூர்வமான ஒரு விஷயம் மற்றும் கவனமுள்ள ஒன்று.அணைத்து உணர்வுகளையும் உணர்ந்து நாம் சாப்பிடுகிறோம்,
* பார்வை
* வாசனை
* சுவை
* கேட்பது
* தொடுதல்
போன்ற அனைத்தையும் உணர்ந்து சாப்பிடுகிறோம்.
நமது கைகளால் நாம் உணவு உண்ணுவதால் நமக்கு ஏரளமான நன்மைகள் இருக்கு உணவு என்பது வெறும் உணவு மட்டும் அல்ல அது ஒரு உணர்வு பூர்வமான ஒரு விஷயம் மற்றும் கவனமுள்ள ஒன்று.அணைத்து உணர்வுகளையும் உணர்ந்து நாம் சாப்பிடுகிறோம்,
* பார்வை
* வாசனை
* சுவை
* கேட்பது
* தொடுதல்
போன்ற அனைத்தையும் உணர்ந்து சாப்பிடுகிறோம்.
நாம் உணவை கையால் சாப்பிடும்போது உணவு,உடல்,மனம் மற்றும் ஆன்மா என அனைத்தையும் ஒன்றிணைகிறது.மேலும் இது சாப்பாட்டு முறையை மென்மையாக்குகிறது,இந்த காரணத்தினால் தான் சில வெளிநாடுகளில் கைகளால் சாப்பிடுவதை ஊக்குவிக்கின்றனர்.இன்றைய நாகரீக உலகின் பலர் கைகளால் சாப்பிடுவதை விரும்புவதில்லை அதுமட்டுமல்லாமல் அதை ஒரு அருவெறுப்பான செயலாக பார்க்கின்றனர்.கைகளால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அவர்களுக்கு தெரியாததே அதற்கு காரணம்.
கைகளால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1.உண்ணுதல் என்பது உணர்வு மற்றும் பேரானந்தத்தை கொடுக்கும் ஒன்று,ஆயுர்வேத படி கையில் இருக்கும் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வரலாறு உண்டு.அதில் பெருவிரல் ஆகாயம்,ஆள்காட்டி விரல் காற்று,நடுவிரல் நெருப்பு,மோதிர விரல் தண்ணீர்,சுண்டுவிரல் நிலம் என நாம் முன்னோர்கள் சொல்லிவைத்தது.இவை ஐந்தும் உங்களை சாப்பிட தூண்டுகிறது.
2.பொதுவாக நம் உள்ளங்கை மற்றும் விரலில் பாக்டீரியா இருக்கும் இதில் நல்ல பாக்டீரியா மற்றும் கெட்ட பாக்டீரியா கலந்திருக்கும் நாம் சாப்பிடும் முன் கைகளை சுத்தம் செய்வதால் கெட்ட பாக்டீரியா அழிந்து நல்ல பாக்டீரியாக்கள் மட்டும் இருக்கும் இது வயிற்றில் ஏற்படும் கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றது.இது போன்ற நல்ல விஷயம் ஸ்பூன் பயன்படுத்துவதால் நமக்கு அது கிடைக்காது.
3.ஸ்பூன் மற்றும் போர்க் பயன்படுத்துபவர்கள் அவர்கள் சாப்பிடும் உணவானது எளிதாகவும்,வேகமாகவும் வயிற்றுக்குள்ளே செல்கிறது.அப்படி உண்பதால் அது உடலில் இரத்த சக்கரை அளவை ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி டைப்-2 சக்கரைநோய் அபாயத்தை அதிகரிக்கும்,ஆய்வில் கைகளால் சாப்பிடுபவர்களை விட 2.5 சதவீதம் ஸ்பூனில் சாப்பிடுபவர்களுக்கே அதிகம் இரத்த சக்கரை அளவு அதிகமாக வருகின்றது.
4.கையில் சாப்பிடுபவர்கள் உணவு உண்ணும் போது அதன் உணர்வையும் உணவின் ருசியையும் உணர்ந்து சாப்பிடுகின்றனர்,இந்த உணர்வு ஸ்பூனில் சாப்பிடுபவர்களுக்கு கிடைப்பதில்லை.
No comments:
Post a Comment