கேழ்வரகு சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ?
கேழ்வரகு சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்குதுன்னு தெரியுமா,கேழ்வரகில் கொழுப்பு சத்து குறைந்தளவு உள்ளது அதுமட்டும் அல்லாமல் நிறைவுறா கொழுப்பு எனப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகளவு உள்ளது.
இது போன்ற தானியங்கள் செரிமானத்துக்கு ரொம்பவும் நல்லது,அதுமட்டும் அல்லாமல் குளுமை தரக்கூடியது.கேழ்வரகு தானியங்களில் மிகவும் சத்தான தானிய வகை,அலர்ஜி உள்ளவர்கள் கூட கேழ்வரகு சேர்த்துக்கொள்ளலாம்.இது உடலில் கொழுப்பை தங்கவிடாமல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுவடையும் மேலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைக்கு கால்சியம் அதிகம் தேவை என்பதால் கேழ்வரகு கஞ்சி,கூழ்,மற்றும் அடைகள் செய்து சாப்பிடுவது உடலுக்கு ரொம்ப நல்லது.
கேழ்வரகு மெதுவாக செரிமனமவதால் அதிக கலோரிகளை உட்கொள்வதை தடுக்கலாம்.அதுமட்டும் அல்லாமல் கேழ்வரகில் நார்சத்து அதிகளவு உள்ளது.
அதிகளவு கேழ்வரகு உட்கொள்ளுதல்,உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.எனவே சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்கள் உட்கொள்ள கூடாது.
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது.அதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
No comments:
Post a Comment