சரும அழகை பாதுகாக்கும் பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் அனைவருக்கும் தெரிந்த ஒரு காய்கறிகளில் ஒன்று அதுமட்டும் அல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று,இந்த பீட்ரூட்டை நாம் சமையலில் பொரியலாகவும்,குழம்புக்கு தேவையான கையாக பயன்படுத்துவோம்.
ஆனால்,இந்த பீட்ரூட்டை ஜூஸ் செய்து சாப்பிடும் பழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு என்றால் குறைவு தான் ஏன் என்றால் சமையலுக்கு மட்டும் தான் நிறையப்பேர் பயன்படுத்துவார்கள் ஜூஸ் செய்து அருந்துவதில்லை அப்படி ஜூஸ் செய்து அருந்துவதால் நமக்கு எராளமான நன்மைகளை அள்ளிதரகூடிய ஒன்று பீட்ரூட்.
தற்போது காலகட்டத்தில் 95% பேர் தங்கள் அழகை பராமறிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.அதற்காக நாம் நிறைய அழகு சாதனாபொருட்களை பயன்படுத்தி வருகின்றோம்,அப்படி நாம் பயன்படுத்தும் பொருளில் நிறைய ரசாயனங்கள் கலக்கபடுகிறது.
அதற்கு பதிலாக இயற்கையாகவே கிடைக்கும் இது மாதிரியான காய்கறிகளை அழகு சாதனா பொருளாக பயன்படுத்தலாம்.நிறையப்பேர் பீட்ரூட் உடலுக்கு மட்டும்தான் நல்லது என்று நினைகின்றனர் அது தவறு பீட்ரூட் அழகை பராமரிக்கவும் பயன்படுத்தபடுகிறது.சிலர் உதட்டில் சாயமாக பயன்படுத்துவார்கள் சிலர் தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள் ஆனால் கோடைகாலத்தில் சருமத்தை பராமரிக்க பயன்படுத்தலாம் சிறந்த ஒரு இயற்கை பொருள்,இன்னும் நிறையபேர் நகரங்களில் பெண்கள் அதிகமாக பீட்ரூட் ஜூஸ் பருகுவதுண்டு.
பீட்ரூட் நன்மைகளை பற்றி பார்ப்போம்:
1.முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் பீட்ரூட் ஜூஸ் 1 ஸ்பூன் கொஞ்சம் சக்கரை கலந்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.
2.கழுத்தில் உள்ள கருமையை நீக்க பீட்ரூட் ஜூஸ் கொஞ்சம் எடுத்து தேவையான அளவு கருமை இருக்கும் இடத்தில் தடவி நன்கு உலர்ந்தபின் கழுவ வேண்டும் அப்படி தினமும் செய்து வந்தால் கருமை மறையும்.
3.சருமம் அதிக வறட்சியாக இருந்தால் பீட்ரூட் ஜூஸ்,தேன்,மற்றும் கொஞ்சம் பால் கலந்து முகத்தில் மாஸ்க் ஆக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
4.பிங்க் நிற உதடுகள் தேவை என்றால் தினமும் படுக்கும் முன்பு கொஞ்சம் பீட்ரூட் ஜுஸை உதட்டில் தடவி காலையில் கழுவினால் நல்லது.
5.முகத்தில் சிலருக்கு எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் அப்படி உள்ளவர்கள் பீட்ரூட் ஜுஸை முகத்தில் தடவி உலர்ந்த பிறகு பாலை கொண்டு துடைத்து எடுத்தல் நல்ல பொலிவு வருவதுடன் எண்ணெய் பசையை போக்கலாம்.
6.முகம் ஒரே நாளில் பொலிவுடன் காண பீட்ரூட் ஜூஸுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீருடன் முகத்தை துடைத்து எடுத்தல் முகம் பொலிவுடன் காணப்படும்,அதிலும் இதை இரவு படுக்கும் முன் செய்தல் இன்னும் பொலிவுடன் காணலாம்.
No comments:
Post a Comment