சிறுநீரக கல் இரண்டு நாட்களில் கரையும்/Remove Kidney stone with in Two days
இன்றைய உணவு பழக்கத்தினால் சிறுநீரக பிரச்சனை என்பது பெரும்பாலனவர்களுக்கு பெரும் பிரச்சனையா இருக்கு,கிராம மக்களைவிட நகரத்தில் வாழும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனைகள் அதிகம் இருக்கு அதாவது இது முதலில் முதுகு வலியில் ஆரம்பித்து பின்பு வலி அதிகம் ஆகும் போது தெரியும் இது முதுகு வலி இல்லை,சிறுநீரக கல் பிரச்சனை என்று இதன் வலி சொல்ல முடியாது அந்த அளவுக்கு வலி அதிகமாக இருக்கும்.
இதற்கு சரியான தீர்வு பீன்ஸ் வைத்தியம் மிகவும் சிறந்த ஒன்று.
பீன்ஸ் எப்படி சாப்பிடுவது?
1/4 கிலோ பிரஞ்சு பீன்ஸ் அதன் விதையை நீக்கிவிட்டு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்,குறைந்தது 2 மணி நேரம் கொதிக்க விடவேண்டும்.பிறகு தண்ணீரை வடிகட்டுவிட்டு பீன்ஸ்ஸை மிக்ஸியில் நன்றாக அரைத்து குடிக்க வேண்டும்.
குடித்த பின்னர் 1௦ நிமிடம் கழித்து 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்,ஒரே முறையில் குடிக்க முடியவில்ல என்றால் கொஞ்சம் நேரம் கழித்து குடிக்க வேண்டும் ஆனால் கண்டிப்பாக 2லிட்டர் தண்ணீர் குடித்துவிடுங்கள்,இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் இன்னும் நல்லது.பின்பு சிறுநீர் வழியாக கல் வெளியாகிவிடும்.
கல் இருப்பவர்கள் இல்லாதவர் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்,கல் இருப்பவர்கள் குடித்தால் கல் கரையும் இல்லாதவர்கள் குடித்தால் கல் வராமல் தடுக்கலாம்.
சிறுநீரக கல் வராமல் தடுக்க!!!
* துளசிஇலை சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உடைவதற்கு உதவியாக இருக்கும்.
*வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கலாம்,அதுமட்டுமல்லாமல் கல் உடைய இந்த வாழைத்தண்டு ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும்.
இவை அனைத்து நீங்கள் கடைபிடிப்பதன்மூலம் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம்,மேலும் இந்த கல் வருவதை தடுக்க தினமும் 3-5 லிட்டர் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்.
இது இயற்கை மருத்துவ முறை பக்கவிளைவுக்கு சாத்தியமே இல்லை.
Good one
ReplyDelete