Rama Online Tamil

Monday, May 28, 2018

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?


இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா கம்பெனியில் இந்த பைக் ரொம்பவே நல்லாவே விற்பனை ஆகுதுன்னு சொல்லலாம்.

இந்த பைக் விலை Rs 72,000-83,000 வரை இருக்கு இதில் நிறைய கலர் கூட இருக்கு உதரணமா நீலம்,கருப்பு,சிவப்பு,சாம்பல் நிறம்,வெள்ளை, போன்ற கலர்கள் இருக்கு இதன் வடிவம் பார்த்தா அபாச்சி பைக் போல தோற்றம் அளிக்கும் அதனாலே எல்லோரும் இந்த பைக் விரும்பி வாங்கினார்கள் இந்த பைக்கில் அணைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது.

1.மைலேஜ்
2.டிஸ்க் பிரேக்
3.டியூப் இல்லாத டயர்
4.டிஜிட்டல் டிஸ்ப்ளே
5.மோனோ சச்பென்செர் என நமக்கு தேவையான முக்கிய அம்சங்கள் உள்ளன.


இந்த பைக் பார்க்க ரொம்பவே நல்லா இருந்தாலும் இவ்வளவு அம்சங்கள் நிறைந்திருந்தாலும் இதில் சில குறைகள் உள்ளன.

ஹோண்டா 16௦ பைக்கின் குறைகள்:

1.இந்த பைக் முதல் குறை அடிக்கடி சச்பென்செர் பிரச்சனை வருகின்றது.

2.இரண்டு பேர்க்கு மேல் உட்காந்தால் பைக் செல்வது ரொம்பவே கடினம் மற்ற 15௦ பைக்கில் கூட இல்லாத பிரச்சனை மூன்று நபர் உட்கார முடியாது.

3.இந்த பைக்கில் முன்னாடி உள்ள டிஸ்க் பம்பர் ஆயில் சீல் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மாதம் தான் வரும் அதற்கு மேல் போனால் ஆயில் சீல் உடைந்து ஆயில் வெளியாகும்.

4.இந்த பைக் மற்ற பைக் போல மூன்று அல்லது நான்கு மாதம் வரை பயன்படுத்த முடியாது நீங்கள் என்னதான் செய்தலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சர்வீஸ் செய்து தான் ஆக வேண்டும்.

5.குறித்த நேரத்தில் நீங்கள் சர்வீஸ் செய்யவில்லை என்றால் புதிய வாகனமாக இருந்தாலும் பயன்படுத்த முடியாது.

6.நாம் கொடுத்து வாங்கும் பணத்திற்கு நிகரான பைக் இது இல்லை,இதை விட குறைந்த பணமும்,குறைந்த cc ம் உள்ள பைக் கொடுக்கும் லைப் இந்த பைக் கொடுப்பதில்லை.

7.புதிதாக இந்த பைக்கை வாங்க விருப்புவர்கள் அந்த பைக் பயன்படுத்திய நபர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்குவது நல்லது.

8.மிக முக்கியமான ஒன்று மோனோ சச்பென்செர் 2 அல்லது மூன்று வருடத்திலே மாற்ற நேரிடும்,இந்த மோனோ சச்பென்செர் அதிக முதுகு வலி ஏற்பட காரணமாக இருக்கும்.

Thursday, May 24, 2018

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க !!!

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க !!!


பொதுவாகவே பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்பு இருக்கும் சாதாரணமாக இருக்கும் வயிறு குழந்தை பெற்றபின் தொப்பை ஏற்படுகிறது,இதை பெண்கள் குறைக்க எவ்வளவோ கஷ்டபடுகின்றனர்.அதிலும் இயற்கையாகவே நடக்கும் பிரசவத்தை விட சிசேரியன் செய்துகொள்பவர்களுக்கு அதிகமாகவே தொப்பை காணப்படுகிறது.

பெண்கள் கர்பமாக இருக்கும் சமயத்தில் அவர்கள் உடலுக்கு சத்து தேவைபடுவதால் அதிக சத்தான உணவுகள் மாத்திரைகள் சாப்பிடுகின்றனர் அப்படி சாப்பிடும்போது அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன,இதனால் பிரசவத்திற்கு பின்பும் அவர்கள் உடலில் அது பெரும் பிரசனையாக உருவெடுகிறது அப்படி ஒன்றுதான் தொப்பை.

இதற்காக உடலை குறைக்க பிரசவத்திற்கு பின் அதிக டயட் இருக்க கூடாத ஏன் என்றால் அவர்களுக்கு போதிய சத்துக்கள் உடலில் இருக்க வேண்டும்.அவர்கள் உடலை குறைக்க அதிக டயட்டில் இருந்தால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் அதனால் குறைவான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் தொப்பையை குறைக்க செய்யலாம்.


 மேலும் பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் என்பதால்  சத்தான உணவை தேடி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது அதனால் உடல் பருமன் மேலும் அதிகமாக கூடும் இப்படி ஏற்படும் உடல் பருமனை உடனே குறைக்க நினைக்காமல் கொஞ்ச கொஞ்சமாக குறைப்பது நல்லது.

பெண்கள் பிரசவத்திற்கு பின் முறையான உணவு பழக்கவழக்கங்கள்,குறைவான டயட் மற்றும் தினமும் காலையில் தேவையான உடற்பயிற்சி கூடவே யோகசனம் செய்தல் நல்லது,மேலும் தொப்பையை குறைக்க பலவிதமான் யோகாசனம் உள்ளது.

தண்ணீர் அதிகமாக பருகவும்

உடல் எடை குறைக்க நினைபவர்கள் முதலில் தினந்தோறும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படி தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற தண்ணீர் உதவியாக இருக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

கொழுப்பு குறைந்த உணவு சாப்பிடவும்

பெண்கள் உடல் எடை குறைக்க நினைபவர்கள் கொழுப்பு அதிகம் இருக்கும் உணவை சாப்பிட கூடாது கொழுப்பு குறைந்த உணவு பொருளை சாப்பிடுவது நல்லது.

கால்சியம் உள்ள பால்

பிரசவத்திற்கு பின் பெண்கள் அதிகம் பால் எடுத்துகொள்வது நல்லது ஏன் என்றால் பெண்கள் தாய்பால் கொடுப்பதால் அவர்களுக்கு கால்சியம் நிறைந்த மாட்டுப்பால் மிகவும் அவசியம்.

பழங்கள்

உடல் எடை குறைக்க நினைக்கும் பெண்கள் பழங்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது மேலும் பழசாறு இன்னும் நல்லது அவர்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் மேலும் அவர்களுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது.

Tuesday, May 22, 2018

முருங்கைகீரை மருத்துவ குணம் தெரியுமா ?

முருங்கைகீரை மருத்துவ குணம் தெரியுமா ?


முருங்கைகீரை எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு கீரை வகை இதில் நிறைய சத்துக்கள் இருக்கிறது என அனைவரும் அறிந்தவைதான்,ஆனாலும் சிலர் இந்த கீரையை சாப்பிடுவதில்லை பொதுவாக நமது தமிழ்நாட்டில்தான் இந்த கீரை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

முருங்கைகீரை  சாப்பிடாத வீடு நான் பார்க்கமுடியாது அதுமட்டும் அல்லாமல் முருங்கைகீரை மரம் பெரும்பாலும் 8௦% வீட்டில் இருக்கும் ஆனாலும் மற்ற கீரைகளை விட இந்த கீரையில் அதிக சத்துக்களும்,அதிக மருத்துவகுணமும் இருக்கு முருங்கைகீரை கசப்பு எதும் இல்லாததால் அணைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் கீரை.

முருங்கைகீரை மட்டும் அல்லாமல் முருங்கை பூ ,முருங்கைக்காய் எல்லாமே பல வழிகளில் நமது உடலுக்கு தேவையான ஒன்று முருங்கைகீரை எளிதாக கிடைக்க கூடிய ஒன்று பெரிதாக பணம் எதும் செலவு இல்லாமல் கிடைக்க கூடிய ஒரு கீரைவகை,சில கீரைகள் சந்தைக்கு போய்தான் வாங்க வேண்டிருக்கும் இல்லை என்றால் கிடைக்காது ஆனால் முருங்கைகீரை நமது வீட்டில் இல்லை என்றால் பக்கத்துவீட்டில் கிடைக்கும் எளிதான நல்ல ஒரு கீரை வகை.


முருங்கைகீரை தரும் சத்துக்கள்:

முருங்கை கீரையில் பலவிதமான சத்துக்கள் உள்ளன இதில் அதிகமாக இரும்புசத்து,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,மற்றும் 4௦ வகையான ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளன.மேலும் 9௦ வகையான சத்துக்கள் உள்ளதாக விஞ்சானிகள் சொல்லுகின்றனர்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு ப்ரோட்டின் உள்ளது,ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின்-சி உள்ளது,வாழைபழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது,கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின்-ஏ உள்ளது,பாலை விட 3 மடங்கு கால்சியம் உள்ளது.

முருங்கைகீரை தரும் மருத்துவ பயன்கள்:

1. முருங்கைகீரையில் அதிகளவு இரும்புசத்து உள்ளத்தால் எலும்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

2.உடல்சூடு அதிகம் உள்ளவர்கள் வாரம் இரண்டுமுறை முருங்கைகீரை சாப்பிட்டுவந்தால் சூடு குறையும்.

3.கண்நோய் கபம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் தொடர்ச்சியாக முருங்கைகீரை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

4.முருங்கைகீரை இலைகள் மற்றும் மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டுவந்தால் கை ,கால் வலிகள் நீங்கும்.

5.முருங்கைகீரை கொஞ்சம் எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களுக்கு உடம்பில் இரத்தம் அதிகம் ஊரும்.

6.முருங்கை இலையில் தாமிரம்,மற்றும் சுண்ணாம்புசத்து அதிகம் உள்ளத்தால் இது சிறுநீரை பெருக்கும்.

7.குழந்தைகளுக்கு முருங்கைகீரை அதிகம் கொடுத்து வந்தால் மூளை வளர்ச்சிபெற உதவியாக இருக்கும்.

8.உடல் தேராமல் இருக்கும் சிலருக்கும் தினமும் முருங்கைகீரை பொரியல் கொடுத்து வந்தால் உடல் தேருவதோடு உடலுக்கு இது அதிக பலத்தை கொடுக்கும்.

பொதுவாகவே முருங்கை மரத்தில இருந்து கிடைக்கும் அனைத்தும் நமது உடலுக்கு நன்மைகளை அள்ளிதர கூடியது,எனவே விலை குறைவு பயன்கள் அதிகம் உள்ள இந்த கீரையை அதிகம் சாப்பிட்டு பயன்பெற வாழ்த்துகிறோம்.

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...